அரசின் இதழான திட்டம் இதழாசிரியர் இளங்கோவன் காலமானார்.
திருச்சியில் வசித்து வந்தவர் இளங்கோவன். இவர், திருச்சி ஆல் இந்திய ரேடியோவில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர். இந்திய அரசு வெளியீட்டுப் பிரிவு துணை இயக்குனராகவும் பணியாற்றியவர்.
பின்னர், ஏ.இளங்கோவன் தமிழக அரசின் திட்டம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் நேற்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகரில் வைக்கப் பட்டுள்ளது.
அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.