கார்த்தி சிதம்பரத்தின் பணபலம்தான் பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார் பாஜக., சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஹெச். ராஜா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் பிரசாரம் மேற்கொண்டார்
அப்போது பேசிய ஹெச். ராஜா காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளனர். அவரது பணபலம் தான் எனக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று கூறினார்
ஏழு எட்டு முறைக்கு மேல் ஐயோ என்னை கைது செய்யாதே… ஐயோ என்னை கைது செய்யாதே என்று ஒவ்வொரு நீதிமன்றமாக போய் வாய்தா வாங்கி கொண்டிருப்பவர்கள் தொகுதிக்கு என்ன சேவை செய்ய முடியும்?
தொகுதியில் அவர்களது பணபலம் எனக்கு சவாலாக இருக்கலாம் ஆனால் என்றுமே விவேகானந்தர் சொல்வது போல் பண பலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை மனித வளத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எனவே எதுவும் எங்களுக்கு சவால் இல்லை! நிச்சயமாக சிவகங்கையில் வெற்றி பெறுவேன் என்று கூறினார் ஹெச்.ராஜா!