December 6, 2025, 7:28 AM
23.8 C
Chennai

கார்த்தியை விமர்சித்த சுதர்சன நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டிப்பு! தலைமை சொல்படி கேட்க அறிவுறுத்தல்!

ks alagiri congress - 2025சிவகங்கை வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கோஷ்டிப் பூசலும் மோதலும் வெடித்துள்ளது.

சிவகங்கை வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப் பட்டுள்ளார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொகுதிக்கு பெருமளவில் உதவிகள் செய்துள்ள சுதர்சன நாச்சியப்பனை விடுத்து, ஊழலிலும் பணபலத்திலும் புரண்டுள்ள கார்த்திக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதா என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள்.

இதை அடுத்து தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார் சுதர்சன நாச்சியப்பன். வெளிநாடுகளில் சொத்துகளைச் சேர்த்துள்ளவர் கார்த்திக் என்றார் அவர்.

இந்நிலையில், வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவித்த பிறகு அவர் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை சுதர்சன நாச்சியப்பன் தவிர்க்க வேண்டும்; கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற அவரும் துணை நிற்க வேண்டும் என்று,  அண்மையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியால் திடீரென விலக்கப் பட்ட திருநாவுக்கரசர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது கூறினார்.

alagiri chidambaram - 2025

இந்நிலையில், தற்போதைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது அவர்,  சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரத்தில், சுதர்சன நாச்சியப்பன் தகுதியான நபர் தான், அவர் கட்சி தலைமை எடுத்த முடிவின்படி நடக்க வேண்டும் என்றார்.

மேலும், நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்தார்  என்று கூறிய அழகிரி,  முன்பு இருமுறை என்னை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றிய வரலாறு உண்டு என்று கூறினார்.

இருக்கும் 9 தொகுதியை மட்டுமே தரமுடிகிறது. மற்றவர்களுக்கு வருத்தம் வருகிறது. காங்கிரசில் தகுதி வாய்ந்த தலைவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

சுதர்சன நாச்சியப்பன் தகுதியானவர். ஆனால், கட்சி தலைமை எடுத்த முடிவை ஏற்க வேண்டும். விமர்சிப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராகவா ? அல்லது கட்சித் தலைமையையா ? என்பதை யோசிக்க வேண்டும்.

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு 8 விருப்ப மனுக்கள் வந்திருந்தன. கட்சி தலைமை எடுத்த முடிவை எதிர்ப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்று கூறினார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.!

இருப்பினும், சிவகங்கை தொகுதியில் சுதர்சன நாச்சியப்பனால் பலன் பெற்ற காங்கிரஸ்காரர்கள் உள்ளக்குமுறலுடன் தான் காத்திருக்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories