கார்த்தியை விமர்சித்த சுதர்சன நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டிப்பு! தலைமை சொல்படி கேட்க அறிவுறுத்தல்!

ks alagiri congress - 2026சிவகங்கை வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கோஷ்டிப் பூசலும் மோதலும் வெடித்துள்ளது.

சிவகங்கை வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப் பட்டுள்ளார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொகுதிக்கு பெருமளவில் உதவிகள் செய்துள்ள சுதர்சன நாச்சியப்பனை விடுத்து, ஊழலிலும் பணபலத்திலும் புரண்டுள்ள கார்த்திக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதா என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள்.

இதை அடுத்து தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார் சுதர்சன நாச்சியப்பன். வெளிநாடுகளில் சொத்துகளைச் சேர்த்துள்ளவர் கார்த்திக் என்றார் அவர்.

இந்நிலையில், வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவித்த பிறகு அவர் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை சுதர்சன நாச்சியப்பன் தவிர்க்க வேண்டும்; கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற அவரும் துணை நிற்க வேண்டும் என்று,  அண்மையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியால் திடீரென விலக்கப் பட்ட திருநாவுக்கரசர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது கூறினார்.

alagiri chidambaram - 2026

இந்நிலையில், தற்போதைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது அவர்,  சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரத்தில், சுதர்சன நாச்சியப்பன் தகுதியான நபர் தான், அவர் கட்சி தலைமை எடுத்த முடிவின்படி நடக்க வேண்டும் என்றார்.

மேலும், நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்தார்  என்று கூறிய அழகிரி,  முன்பு இருமுறை என்னை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றிய வரலாறு உண்டு என்று கூறினார்.

இருக்கும் 9 தொகுதியை மட்டுமே தரமுடிகிறது. மற்றவர்களுக்கு வருத்தம் வருகிறது. காங்கிரசில் தகுதி வாய்ந்த தலைவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

சுதர்சன நாச்சியப்பன் தகுதியானவர். ஆனால், கட்சி தலைமை எடுத்த முடிவை ஏற்க வேண்டும். விமர்சிப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராகவா ? அல்லது கட்சித் தலைமையையா ? என்பதை யோசிக்க வேண்டும்.

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு 8 விருப்ப மனுக்கள் வந்திருந்தன. கட்சி தலைமை எடுத்த முடிவை எதிர்ப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்று கூறினார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.!

இருப்பினும், சிவகங்கை தொகுதியில் சுதர்சன நாச்சியப்பனால் பலன் பெற்ற காங்கிரஸ்காரர்கள் உள்ளக்குமுறலுடன் தான் காத்திருக்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories