தர்கா எதிரில் மரணித்த பிச்சைக்காரரின் பையை சோதித்த போது, அவரது பையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தது கண்டு போலீஸாரும் பொதுமக்களும் ஆச்சரியப் பட்டனர்.
நடிகர் கமலஹாசனின் புஷ்பக விமானம் சினிமா போலவே உள்ளது இந்தச் சம்பவம் என்று ஆச்சரியத்தில் பலரும் வாய்பிளந்தனர்!
ஆந்திர மாநிலத்தில் அனந்தபுர் மாவட்டத்தில் புகழ் பெற்றதாக விளங்குகிறது மஸ்தான் வலி தர்கா. இங்கே, தர்கா எதிரில் ஷேக் பஷீர் என்பவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக பிச்சை எடுத்து வந்தார்.
சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மரணித்தபோது உள்ளூர் மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் வந்து உடலை கைப்பற்றிய போது அவருடைய பையையும் சோதித்துப் பார்த்தனர்.
அதில் மூன்று லட்சத்திற்கு மேல் பணம் இருப்பதை பார்த்து அனைவரும் வியந்தனர். 3.23லட்சம் ரூபாய்.
தர்காவைச் சேர்ந்த அன்பர் ஒருவர், தங்களது தர்காவுக்கு வெளியே ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது தகவலை அடுத்து, அங்கே வந்த போலீஸார், அந்த நபரின் பையை முதலில் சோதனை இட்டனர்.
அவரது பையில் அவர் குறித்த அடையாளங்கள் ஏதும் இருக்கிறதா என்று சோதிப்பதற்காக போலீஸார் முயன்றனர். ஆனால் அவர் குறித்த எந்த அடையாள அட்டையும் சான்றும் கிடைக்கவில்லை,. மாறாக் ரூ.3.22,676 ரூபாய் கிடைத்துள்ளது.
இது குறித்து வட்டார ஆய்வாளர் அனில் குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ண ரெட்டி ஆகியோர் செய்தியாளரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்குக்கு அனுப்பப் பட்டது.