இன்றைய பஞ்சாங்கம் – ஏப். 25
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~* *12 (25.4.2024 ) வியாழன் கிழமை.
வருடம் ~ க்ரோதி {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாஸம் {மேஷ மாதம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 6.51 am வரை ப்ரதமை பின் த்விதியை
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 2.08 am வரை விசாகம் பின் அனுஷம்
யோகம் ~ வியதிபாதம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.00
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ த்விதியை
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!
சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
இன்றைய ராசிபலன்கள்
25.04.2024
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். காதணி சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நெழிவு, சுழிவுகளை அறிந்து கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
அஸ்வினி : ஆதரவு ஏற்படும்.
பரணி : நன்மை உண்டாகும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
எதிர்காலம் சார்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட கால முதலீடு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். தனவரவுகளின் மூலம் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்துவந்த சலசலப்புகள் மறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
கிருத்திகை : முடிவுகள் பிறக்கும்.
ரோகிணி : தேவைகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
குழந்தைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
திருவாதிரை : சிந்தனை மேம்படும்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : பொறுப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
சொத்து விற்பது, வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : லாபகரமான நாள்.
பூரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவியம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். விவேகமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.
அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
எதிலும் திருப்தி இன்மையான சூழல் அமையும். விமர்சனங்களால் மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். தற்பெருமை இன்றி செயல்படுவது நல்லது. சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : திருப்தி இன்மையான நாள்.
சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.
விசாகம் : தேடல் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு உண்டான ஆதரவு கிடைக்கும். அரசுப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் படிப்பு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
விசாகம் : எண்ணங்கள் நிறைவேறும்.
அனுஷம் : கவனத்துடன் செயல்படவும்.
கேட்டை : அலைச்சல் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
சிந்தனைகளில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : ஆரோக்கியம் சீராகும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
போட்டி சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருந்தால் ஆதாயம் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் மூலம் மதிப்பு மேம்படும். மூத்த சகோதரர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். கமிஷன் சார்ந்த செயல்பாடுகளால் தனவரவுகள் மேம்படும். வாகனம் சார்ந்த விஷயத்தில் சிறு சிறு செலவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பூரட்டாதி : செலவுகள் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
தந்தையுடன் அனுசரித்துச் செல்லவும். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் தோன்றி மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். சக ஊழியர்கள் இடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : சூழ்நிலையறிந்து செயல்படவும்.
ரேவதி : அலைச்சல் அதிகரிக்கும்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.
தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்
ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•à®©à®®à¯ பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯