spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்போட்டுக் கொடுத்துவிட்டு ஜகா வாங்கிய ஸ்ரீரெட்டி... சுந்தர்.சி விஷயத்தில் தெளிய வெச்சி அடிக்கணுமாம்!

போட்டுக் கொடுத்துவிட்டு ஜகா வாங்கிய ஸ்ரீரெட்டி… சுந்தர்.சி விஷயத்தில் தெளிய வெச்சி அடிக்கணுமாம்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர்.சி சார் விவகாரம், நான் சற்று விளக்கம் கொடுக்க வேண்டும்..! – இதுதான் திங்கள் இன்று காலை ஸ்ரீரெட்டி போட்டுள்ள தமிழ்லீக்ஸ் தலைப்பின் பேஸ்புக் பதிவு!

சுந்தர்.சி விவகாரத்தில் ரெட்டி அப்படி என்ன சொன்னார்? ஏன் விளக்கம் கொடுக்குமளவு ஜகா வாங்க வேண்டும்?

நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி. மீது நேற்று புகார் தெரிவித்து பதிவிட்டிருந்தார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது. வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளார். இந்நிலையில் சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங் ஸ்பாட் சென்றபோது அவர் என்னை சுந்தர் சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் 200 சதவீதம் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்.

படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர் (கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட் (பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன் பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்… கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை

இவ்வாறு ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதனிடையே, தன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் தவறானது என்றும், இது தொடர்பாக உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஊடகங்களிடம் சுந்தர்.சி கூறியபோது, “அவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் வழக்கு தொடர்வோம்” என்றார்.

இந்நிலையில், சுந்தர்.சி குறித்து தாம் செய்த பதிவுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப் போவதாக ஸ்ரீரெட்டி இன்னொரு பதிவையும் தன் பேஸ்புக் பக்கத்தில் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe