வைகோவை காலி செய்ய சீமான் எடுத்துள்ள அஸ்திரம்!

vaiko stalin karunanidhi - 2026

ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக., வைகோ வசம்; அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டார்கள்! – இதுதான், சமூக வலைத்தளங்களின் தற்போது பரப்பப் படும் செய்தி. இதனைப் பரப்புபவர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானின் சொல்படி கேட்கும் தங்கத் தம்பிகள்!

திமுக.,வில் இருந்த வைகோ.,வை இப்படியே விட்டால் கட்சியை கபளீகரம் செய்துவிடுவார், தனது வாரிசுகளுக்கு ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என்ற  ‘நல்ல’ எண்ணத்தின்  காரணத்தால், வைகோ மீது கொலைப்பழி சுமத்தி கட்சியை விட்டு வெளியேற்றினார் திமுக., தலைவர் கருணாநிதி. பின்னாளில் தன் வாரிசுகள் என்பதில் வாரிசு என்ற ஒன்றை மட்டும் கொண்டு, மு.க.அழகிரியை வேண்டாத வாரிசு ஆக்கிக் கொண்டு, மு.க.ஸ்டாலினை விரும்பும் வாரிசு ஆக்கிக் கொண்டு,  மகன் ஸ்டாலினுக்காக இன்னொரு மகன் அழகிரியை ஓரம் கட்ட அவர் மீதும் கொலைப் பழி சுமத்தினார் கருணாநிதி.

இப்படி ஸ்டாலின் என்ற ஒற்றை மகனுக்காக அனைத்தையும் தியாகம் செய்து, கட்சியை கெட்டியாக வளைத்து வைத்திருக்கும் கருணாநிதி மீது, அண்மைக் காலமாக வைகோ.,வுக்கு தாய் வீட்டுப் பாசம் பொங்கியிருக்கிறது. உடல் நலம் சரியின்றி ஓய்வில் இருக்கும் கருணாநிதியை வீடு தேடிச் சென்று பாசப் பிணைப்புடன் கண்ணீர் மல்க நெஞ்சத்தில் இடம் இருக்கிறது என்றவாறு பார்த்து வருகிறார் வைகோ. திமுக.,வை ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் வாரிசுகளுக்கே என்று பட்டா போட்டு எழுதிக் கொடுத்திருக்கிறாரோ என்னவோ?

மு.க.அழகிரி வீட்டு வாசலில் வந்து, தன் குடும்பம் குழந்தைகள் மகன்கள் இங்கு இருக்கிறார்கள், அவர்கள் வீட்டுக்கும் வந்து செல்லுங்கள் என்று அப்பாவிடம் கெஞ்சும் அளவுக்கு ஒரு இரும்புத் திரையை கோபாலபுரத்தில் போட்டு வைத்திருக்கிறார்கள்! இப்படி ஸ்டாலினுக்காகவே எல்லாம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் திமுக., என்கிற குடும்பச் சொத்தில், திடீரென்று புகுந்து குட்டையைக் குழப்பப் பார்க்கிறார் வைகோ என்பது திமுக.,வினர் பலரின் குற்றச்சாட்டு. அதனால்தான், கடந்த வருடம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கருணாநிதியைப் பார்க்க வந்த வைகோவை., அடித்துத் துரத்தி ஆவேசப் பட்டனர் திமுக., தொண்டர்கள்.

இப்போது மதிமுக.,வில் சிலரே வைகோ.,வின் அரசியல் பிடிக்காமல், உங்களுக்காகத் தீக்குளித்து மரணித்த தொண்டர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள் என்று குரலெடுத்து குமுறு வருகின்றார்கள். ஆனால் வைகோவுக்கு இப்போது தாய் வீட்டுப் பாசம் தலைக்கு ஏறிவிட்டது. உடனே அடுத்த கட்டளை இட்டார்… எவரெல்லாம் ஸ்டாலினை விமர்சித்துப் பேசுகிறார்களோ அவர்கள் கட்சியை விட்டு விலக்கப் படுவர் என்று!

இந்தச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியளித்தது. ஸ்டாலினைப் பற்றி பேசுகிறார் என்ற ஒரே காரணத்தால்தானே திமுக.,வை விட்டு வைகோவை விலக்கிவைக்க நேர்ந்தது கருணாநிதிக்கு என்று கூறும் மதிமுக., தொண்டர்கள், வைகோவின் அறிவிப்பை விநோதமாகவே பார்க்கிறார்கள்.

இதுதான் சரியான சமயம் என்று இப்போது குழம்பிய குட்டையில் மீன் பிடித்தலைப் போல் இறங்கியிருக்கிறார்கள் பங்காளிகளாத் திகழ்ந்த பகையாளிகள் நாம் தமிழர் கட்சியினர்.  நாம் தமிழர் கட்சியினர் பெருவாரியாக சமூக வலைத்தளங்களில் இப்போது பதிவிடும் கருத்து, இதுதான்… ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக.,வை கைப்பற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்பது!

காரணம், திமுக., பக்கம் வைகோ.,வை நெருங்க விடாமல் செய்வதற்கு ஒரு வழி இது என்று அவர்கள் கருதுகின்றார்கள். ஸ்டாலினுக்கும் வைகோவுக்கும் மீண்டும் ஒரு போரை துவக்கி வைத்து, வைகோவை., திமுக. பக்கம் ஒதுங்க விடாமல் செய்வது நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளும் அடுத்த அரசியல் தந்திரம். அதற்காக என்னவெல்லாம் அஸ்திரங்களை விட முடியுமோ அதை எல்லாம் இப்போது சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் மூலம் தங்கள் சாதீய குடும்ப செய்தி டிவி.,யில் பரபரப்பைக் கிளப்ப தயாராகி வருகின்றார்கள்!

 

3 COMMENTS

  1. இந்த நாம் தமிழரின்செயல்பாடுதாங்க…. திமுகாவுக்கும் மதிமுகாவுக்கு ஒரு நல்லஇணககதை உருவாோகுது

  2. என்னமா ரீல்சுத்து ரீங்க
    சிரிப்பு தாங்க வருகிறது

  3. இந்த ரெண்டு பேரும் (சீமான் & வைகோ ) நாதாரிகள். இவங்க யாரோட சேர்ந்தாலும் இவங்களும் உருப்பட மாட்டாங்க அவனுங்களையும் உருப்படவிடமாட்டாங்க..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories