February 20, 2026, 1:06 AM
26.4 C
Chennai

வைகோவை காலி செய்ய சீமான் எடுத்துள்ள அஸ்திரம்!

vaiko stalin karunanidhi - 2026

ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக., வைகோ வசம்; அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டார்கள்! – இதுதான், சமூக வலைத்தளங்களின் தற்போது பரப்பப் படும் செய்தி. இதனைப் பரப்புபவர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானின் சொல்படி கேட்கும் தங்கத் தம்பிகள்!

திமுக.,வில் இருந்த வைகோ.,வை இப்படியே விட்டால் கட்சியை கபளீகரம் செய்துவிடுவார், தனது வாரிசுகளுக்கு ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என்ற  ‘நல்ல’ எண்ணத்தின்  காரணத்தால், வைகோ மீது கொலைப்பழி சுமத்தி கட்சியை விட்டு வெளியேற்றினார் திமுக., தலைவர் கருணாநிதி. பின்னாளில் தன் வாரிசுகள் என்பதில் வாரிசு என்ற ஒன்றை மட்டும் கொண்டு, மு.க.அழகிரியை வேண்டாத வாரிசு ஆக்கிக் கொண்டு, மு.க.ஸ்டாலினை விரும்பும் வாரிசு ஆக்கிக் கொண்டு,  மகன் ஸ்டாலினுக்காக இன்னொரு மகன் அழகிரியை ஓரம் கட்ட அவர் மீதும் கொலைப் பழி சுமத்தினார் கருணாநிதி.

இப்படி ஸ்டாலின் என்ற ஒற்றை மகனுக்காக அனைத்தையும் தியாகம் செய்து, கட்சியை கெட்டியாக வளைத்து வைத்திருக்கும் கருணாநிதி மீது, அண்மைக் காலமாக வைகோ.,வுக்கு தாய் வீட்டுப் பாசம் பொங்கியிருக்கிறது. உடல் நலம் சரியின்றி ஓய்வில் இருக்கும் கருணாநிதியை வீடு தேடிச் சென்று பாசப் பிணைப்புடன் கண்ணீர் மல்க நெஞ்சத்தில் இடம் இருக்கிறது என்றவாறு பார்த்து வருகிறார் வைகோ. திமுக.,வை ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் வாரிசுகளுக்கே என்று பட்டா போட்டு எழுதிக் கொடுத்திருக்கிறாரோ என்னவோ?

மு.க.அழகிரி வீட்டு வாசலில் வந்து, தன் குடும்பம் குழந்தைகள் மகன்கள் இங்கு இருக்கிறார்கள், அவர்கள் வீட்டுக்கும் வந்து செல்லுங்கள் என்று அப்பாவிடம் கெஞ்சும் அளவுக்கு ஒரு இரும்புத் திரையை கோபாலபுரத்தில் போட்டு வைத்திருக்கிறார்கள்! இப்படி ஸ்டாலினுக்காகவே எல்லாம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் திமுக., என்கிற குடும்பச் சொத்தில், திடீரென்று புகுந்து குட்டையைக் குழப்பப் பார்க்கிறார் வைகோ என்பது திமுக.,வினர் பலரின் குற்றச்சாட்டு. அதனால்தான், கடந்த வருடம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கருணாநிதியைப் பார்க்க வந்த வைகோவை., அடித்துத் துரத்தி ஆவேசப் பட்டனர் திமுக., தொண்டர்கள்.

இப்போது மதிமுக.,வில் சிலரே வைகோ.,வின் அரசியல் பிடிக்காமல், உங்களுக்காகத் தீக்குளித்து மரணித்த தொண்டர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள் என்று குரலெடுத்து குமுறு வருகின்றார்கள். ஆனால் வைகோவுக்கு இப்போது தாய் வீட்டுப் பாசம் தலைக்கு ஏறிவிட்டது. உடனே அடுத்த கட்டளை இட்டார்… எவரெல்லாம் ஸ்டாலினை விமர்சித்துப் பேசுகிறார்களோ அவர்கள் கட்சியை விட்டு விலக்கப் படுவர் என்று!

இந்தச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியளித்தது. ஸ்டாலினைப் பற்றி பேசுகிறார் என்ற ஒரே காரணத்தால்தானே திமுக.,வை விட்டு வைகோவை விலக்கிவைக்க நேர்ந்தது கருணாநிதிக்கு என்று கூறும் மதிமுக., தொண்டர்கள், வைகோவின் அறிவிப்பை விநோதமாகவே பார்க்கிறார்கள்.

இதுதான் சரியான சமயம் என்று இப்போது குழம்பிய குட்டையில் மீன் பிடித்தலைப் போல் இறங்கியிருக்கிறார்கள் பங்காளிகளாத் திகழ்ந்த பகையாளிகள் நாம் தமிழர் கட்சியினர்.  நாம் தமிழர் கட்சியினர் பெருவாரியாக சமூக வலைத்தளங்களில் இப்போது பதிவிடும் கருத்து, இதுதான்… ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக.,வை கைப்பற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்பது!

காரணம், திமுக., பக்கம் வைகோ.,வை நெருங்க விடாமல் செய்வதற்கு ஒரு வழி இது என்று அவர்கள் கருதுகின்றார்கள். ஸ்டாலினுக்கும் வைகோவுக்கும் மீண்டும் ஒரு போரை துவக்கி வைத்து, வைகோவை., திமுக. பக்கம் ஒதுங்க விடாமல் செய்வது நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளும் அடுத்த அரசியல் தந்திரம். அதற்காக என்னவெல்லாம் அஸ்திரங்களை விட முடியுமோ அதை எல்லாம் இப்போது சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் மூலம் தங்கள் சாதீய குடும்ப செய்தி டிவி.,யில் பரபரப்பைக் கிளப்ப தயாராகி வருகின்றார்கள்!

 

3 COMMENTS

  1. இந்த நாம் தமிழரின்செயல்பாடுதாங்க…. திமுகாவுக்கும் மதிமுகாவுக்கு ஒரு நல்லஇணககதை உருவாோகுது

  2. என்னமா ரீல்சுத்து ரீங்க
    சிரிப்பு தாங்க வருகிறது

  3. இந்த ரெண்டு பேரும் (சீமான் & வைகோ ) நாதாரிகள். இவங்க யாரோட சேர்ந்தாலும் இவங்களும் உருப்பட மாட்டாங்க அவனுங்களையும் உருப்படவிடமாட்டாங்க..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories