13 வருடங்களுக்குப் பிறகு அரிதாரம் பூசுகிறார் விஜயசாந்தி! ஆனாலும் அவர், மாறவே இல்லை என்று புகழாரம் சூட்டுகிறார் இயக்குனர் அனில் ராவிபூடி.!
லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி முகத்திற்கு மீண்டும் மேக்கப் போட்டுள்ளார். மகேஷ்பாபுவின் ஷூட்டிங்கில் பங்கு பெறுகிறார் .இந்த செய்தியை இயக்குனர் அனில் ராவிபூடி வெளியிட்டுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டாராக தெலுங்கு ரசிகர்களின் இதயங்களில் மறையாத முத்திரை பதித்துக் கொண்ட நடிகை விஜயசாந்தி ஒருபுறம் ஹீரோயினாக ஸ்டார் ஹீரோக்களின் ஜோடியாக நடித்த படியே மறுபுறம் பவர்ஃபுல் மகளிர் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களிலும் நடித்தார்.
விஜய் சாந்தி இறுதியாக ‘நாயுடம்மா’ சினிமாவில் நடித்தார். 2006 இல் இந்த படம் வெளிவந்தது. அதன்பின் விஜயசாந்தி தன் நேரம் முழுவதையும் அரசியலுக்கே ஒதுக்கினார். எம்பியாக பணியாற்றினார்.
இத்தனை நாட்களாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட விஜயசாந்தி மீண்டும் வெள்ளித்திரையில் தென்படுகிறார். சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு விஜயசாந்தி ஒப்புக்கொண்டார்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்கும் செய்தியை இந்தப் படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் அனில்ராவிபூடி தெரிவித்தார் .
அவர் திங்கள் கிழமை நேற்று தனது ட்விட்டரில், “விஜயசாந்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேக்கப் போட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளில் அவரிடம் எந்த மாற்றமும் வரவில்லை. அதே டிசிப்ளின் அதே நன்னடத்தை அதை dynamism. விஜயசாந்தி அவர்களை வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறு இருக்க ‘சரிலேது நீகெவ்வரு’ ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெறுகிறது. மகேஷ்பாபுவோடு ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் . தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.