மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கௌரவப்படுத்தும் வகையில் தில்லி பெரோஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டது.
மைதானத்துக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அருண் ஜேட்லியின் குடும்பத்தினர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மைதானத்திலுள்ள பெவிலியன் ஒன்றுக்கு, தற்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பெயர் சூட்டப்பட்டது.