“உயிரோடுதான் எரித்தோம்…” பகீர் தகவல் சொன்ன குற்றவாளிகள் இன்று என்கவுண்டரில்!

Published:

hyderabad rape case accusts - 2026

ஹைதராபாத் பெண் டாக்டர் படுகொலையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து சைபராபாத் போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது சில பகீர் தகவல்களைக் கூறியுள்ளனர்.

போலீஸ் கஸ்டடியில் எடுத்த முதல் நாள் செர்லபல்லி சிறையிலேயே குற்றவாளிகளை விசாரித்தனர். செல்போனை அந்தப் பெண்ணை எரித்த இடத்திற்கு அருகிலேயே புதைத்து வைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதோடு திசாவை உயிரோடுதான் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். விசாரணையின் போது அவர்கள் சற்றும் குற்ற உணர்ச்சியோ பச்சாதாபமோ இல்லாமல் நடந்து கொண்டதாக தெரிகிறது.

புதன்கிழமை மாலை போலீஸ் கஸ்டடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வியாழக்கிழமை ஒருநாள் அவர்களை சிறையில் விசாரித்தார்கள்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை அவர்களை அந்தப் பெண் பலாத்காரம் செய்து உயிருடன் எரிக்கப் பட்ட இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். குற்றம் எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்டவும், அடையாளம் காட்டவும் அழைத்துச் சென்றனர்.

பொதுமக்கள் பெரும் கொந்தளிப்புடன் இருப்பதால், அவர்களை சம்பவ இடத்துக்கு பகலில் அழைத்துச் செல்ல முடியாது என்பதால், சம்பவம் நடந்தது போன்ற இரவிலேயே அவர்களை அங்கு அழைத்துச் சென்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

குற்றவாளிகள் தப்பி ஓடும்போது என்கவுன்டர் செய்து சுட்டால் அது மனித மனித உரிமை மீறல் என்று சொல்லி சங்கங்கள் போர்க்குரல் எழுப்பும். ஆனால், இந்தச் சம்பவத்தில், குற்றவாளிகள் போலீசாரை தாக்கினர் என்றும் அவர்களிடமிருந்த துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தனர் என்றும் கூறப்படுகிறது.எனவே, தற்காப்புக்காக போலீசார் என்கௌன்டர் செய்ய நேர்ந்தது என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை, அந்தப் பெண் கொல்லப் பட்ட அதே இரவு நேரத்தில் அந்தப் பெண் உயிரோடு தகனம் செய்யப்பட்ட பத்தாவது நாள் அவள் ஆத்மாவுக்கு சாந்தி காரியம் செய்யும் விதமாக…. சாந்தி சடங்காக இது நடத்தப்பட்டதாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img