புது தில்லி:
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பயண ஏற்பாட்டின் படி, லண்டன் சென்றுள்ளதாக கூறப்பட்டது. அண்மையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.