திருப்பதி: ஆந்திராவில் கடுமையான வெயிலுக்கு 58 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் ஓரே நாளில் 58 பேர் வெயில் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி இறந்தனர். சித்தூர் மாவட்டத்தில் சேர்ந்த கிருஷ்ணம்மா(66), சின்னாரெட்டி(70), கிருஷ்ணம்மா(53), நரசிம்மலநாயுடு(65), பிரம்மாயி ஆச்சாரி(60), பிரதாப்ரெட்டி(67) மற்றும் த லட்சுமியம்மா(60) உள்பட 7 பேர் வெயில் கொடுமைக்கு பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.
இதேபோல், பிரகாசம் மாவட்டத்தில் 13 பேரும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 பேர், குண்டூர் மாவட்டத்தில் 10 பேர், கிருஷ்ணா மாவட்டத்தில் 3 பேர், விஜயநகரம் மாவட்டத்தில் 7 பேர், நெல்லூர் மாவட்டத்தில் 10 பேரும் பலியாகினர். மேலும்,அனந்தபுரம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 58 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ராஜமுந்திரி மாவட்டத்தில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயிலும்,112 டிகிரியும், சித்தூரில் 109 டிகிரியும், திருப்பதியில் 111 டிகிரியும் பதிவாகி இருந்தது. இருப்பினும், ஒரு சில உள்மாவட்ட கிராமங்களில் சூறைச் காற்றுடன் கனமழை பெய்தது.