கரோனா பரவலின் பயங்கரமான பின்னணியில் மத்திய அரசு ஆரோக்கிய சேது ஆப் எடுத்துவந்துள்ளது. இந்த ஆப் ஒவ்வொருவரின் ஃபோனிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூட குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த ஆப் மீது எம்ஐஎம் தலைவர் அசதுதீன் ஒவைசி தீவிர விமர்சனம் செய்துள்ளார். அது ஒரு பயனற்ற செயலி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்த ஆப் பயன்படுத்துவர்களின் டேடா பயனற்றதாக மாறும் ஆபத்து தென்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மிக மிக ஆபத்தானதாக தென்படும் கரோனா வைரசை அரசாங்கம் நம்பத்தன்மை இல்லாத ஆரோக்கிய சேது செயலியைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்று பார்ப்பது துரதிருஷ்டவசமானது என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆப்பை பயன்படுத்துபவர்கள் தம் தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டி வருகிறது என்றும் அது அவர்களுடைய தனியுரிமைககு பங்கம் விளைவிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் அவர் நேராக மத்திய அரசாங்கத்தின் பெயரை பயன்படுத்தாமல் டெல்லி சுல்தான்களின் பெயர் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த ட்வீட் மீது சர்ச்சை நடந்து வருகிறது.