திருப்பதியில்… மூடப்பட்ட மொட்டை அடிக்கும் நிலையங்கள்!

Published:

tirupathi mottai
tirupathi mottai

திருமலை திருப்பதியில் மொட்டை அடிக்கும் நிலையங்கள் மூடப்பட்டன…

இரண்டு மாதங்களுக்கு மேலாக நின்று போயிருந்த திருமலை ஸ்ரீவாரி தரிசனங்கள் ஆரம்பமாகின்றன. கொரோனா காரணமாக தரிசனங்களை நிறுத்தி வைத்த பின் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு ஜூன் எட்டாம் தேதி முதல் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.

இதன்படி முதலில் சோதனை ஓட்டம் நடந்தது. சில தி தி தேவஸ்தான ஊழியர்கள் சமூக விலகலைக் கடைபிடித்து சுவாமியை தரிசித்தார்கள். இந்த விஷயத்தை திதிதே சேர்மன் ஓய்வி சுப்பாரெட்டி வெளியிட்டார்.

காலை ஊழியர்கள் 100 பேருக்கு சுவாமி தரிசனம் செய்வித்து ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பேரை அனுப்பலாம் என்ற அம்சம் குறித்து பரிசீலித்ததாக அவர் கூறினார். காலை 8 மணி முதல் 10 மணி வரை உள்ளூர் வாசிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சோதனை ஓட்டம் நடக்கும் என்றும் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்யலாம் என்றும் முதலில் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
tirupathi mottai
tirupathi mottai

அரசாங்க நிபந்தனைகளுக்கு உட்பட்டு தரிசனங்கள் இருக்கும் என்றும் திதிதே வழிமுறைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, திருமலையில் தலைமுடியை சமர்ப்பிக்கும் நிலையங்களை தற்காலிகமாக மூடி விட்டதாக அறிவித்துள்ளார்கள். மற்றும் நான்கு பிரச்னைகளோடு கூடிய அம்சங்களை அடையாளம் கண்டதாகவும் ஒய்வி சுப்பாரெட்டி தெரிவித்தார்.

அன்ன பிரசாத கேந்திரம் அருகில் ஒவ்வொருவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தீர்த்தம் மற்றும் சடாரி ரத்து செய்வதாகவும் கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என்றும் கன்டைன்மென்ட், ரெட் ஜோன் பகுதியிலுள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஒய்வி சுப்பாரெட்டி கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img