18 ஆயிரம் அடி உயரம்… உடலை உறையவைக்கும் பனி… யோகா செய்து அசத்திய இந்திய ராணுவத்தினர்!

Published:

yoga indian army
yoga indian army

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று யோகாசனங்கள் செய்து இந்த நாளை கடைபிடிக்கின்றனர் இந்திய ராணுவத்தினர் 18 ஆயிரம் அடி உயர இமயமலையில் உடலை உறைய வைக்கும் பணியில் யோகா செய்யும் புகைப்படங்கள் வெளியாகி  நாட்டு மக்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. 

உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21- ஆம் தேதியை சர்வதேச யோகா தின நாளாக  அறிவித்தது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, சர்வதேச யோகா தினம், சர்வதேச அளவில் இன்று டிஜிட்டல் மூலம் கொண்டாடப் படுகிறது. சர்வதேச யோகா தினமான இன்று நாட்டு மக்களிடம் இன்று காலை பிரதமர் மோடி உரையாற்றினார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

உங்களது அன்றாட வாழ்வில் யோகாவை ஓர் அங்கமாகப் பழகுங்கள். இது உடல் வலிமையுடன் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் இல்லை. யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்…. என்று குறிப்பிட்டார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்களும் யோகா செய்தனர். லடாக் – திபெத் எல்லையில் லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்தனர். அதுபோல், இந்தியா – சீனா எல்லையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்களும் யோகா செய்தனர். இந்தப் படங்கள் வெளியாகி நாட்டு மக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது .

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img