கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. இந்தச் சம்பவத்தில் உயிழந்தோர் தொடர்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த மே மாதம், 6வது யூனிட்டில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.