ஜாக்கிரத…உங்க செல்போன் பத்திரம்! இப்படியும் திருட்டு நடக்குது!

Published:

cellphone theft
cellphone theft

செல்போனை பார்த்துக்கொண்டே ஒருவர் சாலையில் நடந்து வரும்போது கண நேரத்தில் அதை பறித்துக்கொண்டு திருடர்கள் டூவீலரில் தப்பிச்சென்றனர் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது

ஹைதராபாதில் உள்ள கிஷண்பாகில் வெள்ளிக்கிழமை நேற்று, நட்டநடு ரோட்டில், மதியத்தில் இரு திருடர்கள் மொபைல் போனை இளைஞர் ஒருவரிடமிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு  தப்பித்து ஓடினார்கள். இந்த சம்பவம் என்எம் குடா ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் அருகில் நடந்தது.

 ஒருவர் மொபைல் போனை  பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். அதற்குள் பைக்கில் வந்த இரு திருடர்கள் அவருடைய கையில் இருந்த மொபைல் போனை பிடுங்கிக்கொண்டு கண்மூடி திறப்பதற்குள் அங்கிருந்து தப்பித்து விட்டனர். அவர்களை அந்த இளைஞர் துரத்திச் சென்றாலும் பயனில்லாமல் போனது.

இந்த திருட்டுக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. சிசிடிவி கேமரா காட்சிகள் ஆதாரமாக வைத்து போலீசார் திருடர்களைப் பிடிப்பதற்காக தேடி வருகிறார்கள்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img