ஸ்ட்ரெக்சரை தள்ள லஞ்சம்! 4 வயது சிறுவனே தாத்தாவை வைத்து தள்ளிய சோகம்! வைரல் வீடியோ!

stacture

மருத்துவமனை ஊழியர்கள் கேட்ட லஞ்ச பணத்தை தனது தாயால் தர முடியாததையடுத்து, விபத்தில் காயமடைந்த தன் தாத்தாவை சிகிச்சைக்காக ஸ்ட்ரெக்சரில் வைத்து, நான்கு வயது சிறுவன் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், டியோரிய மாவட்டம், பர்ஹாஸ் பகுதிக்குட்பட்ட கௌரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெடி யாதவ். இரண்டு நாட்களுக்கு முன் சாலை விபத்தில் படுகாயமடைந்த இவர், கோராக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு விபத்தில் காயங்கள் ஏற்பட்ட இடங்களில் தினமும் மருந்து (டின்ச்சர்) வைத்து, மருத்துவர்கள் சுத்தம் செய்து வருகின்றனர், டிரஸ்சிங் எனப்படும் இந்தப் பணியை செய்வதற்காக, யாதவை தினமும் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இருந்து மருத்துவரின் அறைக்கு ஸ்ட்ரெக்கரில் அவரை படுக்கவைத்து அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்தப் பணியை மேற்கொள்ள மருத்துவமனை பணியாளர்கள் (வார்டு பாய்) ஒவ்வொரு முறையும் லஞ்சம் கேட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் யாதவின் மகளிடம் வார்டு பாய்க்கு தர அந்தப் பெண்ணிடம் பணம் இல்லாததால், தமது தந்தையை தானே ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளிக்கொண்டு, மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

தனது தாய் கஷ்டப்படுவதை பார்த்த, அந்த இளம்பெண்ணின் நான்கே வயதான மகன், தனது தாத்தா படுத்திருக்கும் ஸ்ட்ரெக்சரை தன் அம்மாவுடன் சேர்ந்து தள்ளிக் கொண்டு சென்றுள்ளான்.

இந்த கொடுமையான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் காங்கிரஸின முன்னாள் தேசிய தலைவர் கேசவ் சந்த் யாதவ் உள்ளிட்டோர், தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய கோராக்பூர் மாவட்ட ஆட்சியர், நோயாளியிடம் லஞ்சம் கேட்ட வார்டு பாயை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Entertainment News

Popular Categories