உபியில் சுடப்பட்ட பத்திரிகையாளர் உயிரிழப்பு!

shoot

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 20 ஆம் தேதி சுடப்பட்ட பத்திரிக்கையாளர் விக்ரம் ஜோஷி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரது தலையின் நரம்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டதில் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபத்தில் இருக்கும் விஜய் நகரைச் சேர்ந்தவர் விக்ரம் ஜோஷி. இவர் ஜன் சாகர் டுடே என்ற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி தனது மகள்களை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் இவரை சுட்டுள்ளனர்.

vikram

அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் இது பதிவாகி இருக்கிறது. பைக்கில் சென்று கொண்டு இருக்கும்போது அதிரடியாக நுழையும் நபர்கள் அவரை துப்பாக்கியால் சுடுகின்றனர். இதில் தடுமாறி கீழே விழுகிறார். பைக் சாய்ந்தவுடன் அதில் அமர்ந்து இருந்த அவரது இரண்டு மகள்களும் தப்பி ஓடுகின்றனர்.

https://dhinasari.com/crime-news/157466-father-shot-in-front-of-daughter-crying-daughter-for-help-video-display.html

இதுதொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏன் விக்ரம் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து இன்னும் சரியாக தெரிய வரவில்லை. அவரது உறவினர் பெண்ணுக்கு தொடர்ந்து சில நபர்கள் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அவர்கள் மீது போலீசில் விக்ரம் புகார் கொடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர் கொடுத்த புகாரின் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரி ராகவேந்திரா தற்போது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகள் குறித்த விசாரணை அறிக்கை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

விக்ரம் மரணம் குறித்து அவரது உறவினர் கூறுகையில், ”எனது சகோதரியை சிலர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்தனர். அன்று அவளுடைய பிறந்த நாள் கூட. அவர்கள் மீது விக்ரம் புகார் கொடுத்து இருந்தார். எனது சகோதரியுடன் வீட்டுக்கு வரும்போது அவர் சுடப்பட்டார். கமல் உத் தின் என்பவரின் மகன் தான் விக்ரமை சுட்டது. அவரை கைது செய்யும் வரை நாங்கள் விக்ரமின் உடலை வாங்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Entertainment News

Popular Categories