கொரோனா பீதியால் மனித நேயம் இழந்த வீட்டு உரிமையாளர்! மயானத்தில் தங்கிய 80 வயது மூதாட்டி!

Cemetery
Cemetery

கொரானா தாக்கிவிடும் என்ற பயத்தில் வீட்டு உரிமையாளர் 80 வயது பாட்டிக்கு செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 வயதான யெகுலா வீரம்மா என்ற பெண், ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரியின் அகிவேடு கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் தனது இரண்டு மகன்களோடு வசித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சைக்கு பின்னர், மருத்துவமனையில் இருந்து அந்த மூதாட்டி வீடு திரும்பிய போது வீட்டு உரிமையாளர் பீதலா ராஜு, மூதாட்டி வீரம்மாவை வீட்டிற்க்குள் அனுமதிக்கவில்லை

மூதாட்டி மூலம் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி விடும் என்ற பயத்தில் வீட்டு உரிமையாளர் வீரம்மா பாட்டியை அவரது 2 மகன்களை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேருமாறு இரவு நேரத்தில் கூறியுள்ளார்.

இதனால் கையில் காசும் இல்லாமல் ராத்திரியில் எங்கே போவதென்றும் தெரியாமல் திகைத்த மூதாட்டி கடந்த ஏப்ரல் 19ம் தேதி தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு, இரவு நேரத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த ஒரு சுடுகாட்டில் தங்கியுள்ளனர்.

இதை பார்த்த பொதுமக்களில் சிலர் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேற்கு கோதாவரி எஸ்.பி. நாராயண் நயா, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகிவேடு துணை ஆய்வாளர் வீரபத்ராவிடம் உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற துணை ஆய்வாளர், சுடுகாட்டில் தங்கியிருந்த மூதாட்டியின் குடும்பத்தை மீட்டு அவர்களின் வீட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளார்.

பின்னர், மூதாட்டியை வீட்டுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories