எச்சரிக்கை: திமுக.,வினருக்கு வீடு நிலம் வாடகைக்குக் கொடுத்தவர்கள், பட்டா உரிமையாளர் பெயரிலேயே இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற கருத்து, சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
முரசொலி மூலப் பத்திரம் கேட்டால், அது இருக்கிறது, ஆனால் உங்களுக்குக் காட்ட முடியாது என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது, இல்லை அது வாடகைக்கு உள்ளது என்று உதார் விடுகிறார்கள். முரசொலி படிக்கிறவன் முட்டாள்னா, நாமும் இவனுகள போல முட்டாள்னு நினைச்சிட்டாய்ங்களோ… என்றும் கருத்துகள் உலா வருகின்றன.
#நேற்று_நடந்த_NCSC_விசாரணையில்_ஸ்டாலின்_தரப்பில்_கூறிய_Great_Escape_Story :
அதவாது முரசொலி அலுவலகம் வாடகையில் நடப்பதாகவும், அந்த இடம் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர். அதாவது பஞ்சமி நிலத்தை நாங்கள்(கருணாநிதி, ஸ்டாலின் ) அபகரிக்கவில்லை, முரசொலி மாறனுக்கு தான் தெரியும். அவர்தான் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு பட்டா வாங்கியுள்ளார் எனவே முரசொலி மாறன் தரப்பை தான் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கட்டுக்கதை சொல்லி தப்பிக்கிறார்கள் ( Escape )
அப்படியானால் 1985 ஆண்டு அஞ்சுகம் பதிப்பகம் பட்டாவை ஸ்டாலின் காட்டியது ஏன்?
புதிய விவாதத்திற்கு அவர்களே வழிவகுத்து விட்டார்கள். ஆக மூலபத்திரம் விசயம் இன்னும் சிந்து பாத் கதையாக மாறுகிறது.
மற்றும் முதல் மனுதாரர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன SC சமூகத்தை சார்ந்தவர் இல்லை என்ற திமுக வாதத்தால் என்னுடைய சாதிசான்றுடன் புதிய மனுவை கொடுக்கும்படி ஆணையம் கேட்டுக்கொண்டது.
– தடா பெரியசாமி
#முரசொலி வாடகை கட்டிடம். இதை #மூலபத்திரம் கேட்டப்ப சொல்லாம மூணு மாசம் கழிச்சு சொல்லுறே. ????????
வாடகை கட்டிடத்து #பட்டா உன்கிட்ட எப்படி வந்துச்சு? ????????????
எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு முரசொலி படிக்கிற கிறுக்கு பயலா தெரியுதுல்ல…. ???????????? @Mkstalin
சரி வாடகை கட்டிடம்.. வாடகை யாருக்கு கட்டற..
முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு வந்தவுடன் முரசொலி பெயருக்கு ஒரு பட்டா காட்டினார்கள். மூல பத்திரம் எங்கே என்று கேட்ட போது விசாரிக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மீது வழக்குப் போட்டார்கள்.
அதெல்லாம் சட்டப்படிதான் விசாரணை நடக்கிறது என்றவுடன் வாய்தா வாங்கிவிட்டு புகார் கொடுத்த பிஜேபியின் சீனிவாசன் ஆதாரம் தரவில்லை என்று கிளப்பிவிட்டார்கள். புகார் கொடுத்த சீனிவாசனின் சாதி என்ன என்று ஆராய்ந்து அவர் வழக்கு போட்டது தப்பு என்றார்கள். சம்பந்தப்பட்ட சாதிக்காரர் தடா பெரியசாமியிடம் ஆணையம் புகார் வாங்கிக் கொண்டு பதில் கேட்டவுடன் முரசொலி செயல்படுவது வாடகை இடத்தில் என்றார்கள்.
முரசொலி மாறனின் ஒரிஜினல் பெயரில் இடம் உள்ளது என்று பிஎஸ்என்எல் ஊழல் புகழ் வாரிசுகளை உள்ளே இழுத்து விட்டுள்ளார்கள். வாடகை இடத்துக்கு எப்படி பட்டா காட்டினார்கள்? வாடகை இடம் என்றால் அதைச்சொல்ல ஏன் இத்தனை மாதங்கள்?
பத்திரம் இதோ என்று தில்லிக்குக் கொண்டு போன பெட்டியில் இருந்தது என்ன? இனிமேலும் யார் எப்போது முரசொலி அலுவலக நிலத்தின் மூல பத்திரத்தைக் காட்டுவார்கள்?
– அருண்பிரபு ஹரிஹரன்