திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக., பொ.செ. வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர், இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தால், எவரேனும் ஒருவர் பாதிப்படைந்தார் என்று நிரூபித்துவிட்டால், ஒரு கோடி ரூபாய் பரிசு தரத் தயார் என்று தெரிவித்துள்ளார் பாஜக., வழக்கறிஞர் ஒருவர்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகவல், சமூகத் தளங்களில் வைரலானது. அதில்…
பித்தலாட்ட அரசியல்வாதிகளான சுடலை, வைகோ, சீமான், திருமா, கமல் வகையறாக்களுக்கு சவால்…!!!????
இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தால், யாரேனும் ஒருவர் பாதிப்படைந்ததார் என, ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், 1கோடி ரூபாய் பரிசு – பா.ஜவைச் சேர்ந்த, வழக்கறிஞர் நாமக்கல் மாவட்ட செயலர் தங்கவேலு