April 30, 2025, 9:44 PM
31.3 C
Chennai

காதல் வலை வீசி நகை பணம் பறித்த காதலன் கைது!

vignesh

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியை ஏமாற்றி பணம், நகை பறித்த மதுரை இளைஞர் போலீசாரிடம் சிக்கினார்.

தமிழகத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக இணையதளங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல பெண்கள் முன்பின் தெரியாத நபரிடம் பழகி, புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி வைத்துவிட்டு, பின்னர் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை வில்லாபுரம் மகாலிங்கம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ்(21) இன்ஸ்டாகிரம் பயன்படுத்தி அதில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கல்லூரி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

instagram

இந்த நிலையில் விக்னேஷ் அந்த மாணவியிடம், எனக்கு பணக் கஷ்டம் உள்ளது. எனவே நீ எனக்கு பணம் மற்றும் நகை கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

ALSO READ:  சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!

இதையடுத்து அந்த கல்லூரி மாணவி தன்னிடம் இருந்த பணத்தையும் தான் அணிந்திருந்த நகையையும் கொடுத்து உதவியுள்ளார். ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில் , விக்னேஷ் அந்த நகை மற்றும் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார்.

மாணவி அவ்வப்போது பணம், நகையை திருப்பிக்கேட்டப்போது விக்னேஷ் அவரது அழைப்புகளை தவிர்த்தாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த கல்லூரி மாணவி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.

இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் இடம் விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷ் அந்த மாணவியிடம் நகை , பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்ற முயன்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories