கொரொனா தொற்று குறைந்தால் செப்டம்பர் மாதம் பள்ளி- கல்லூரிகளை திறக்க பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.
ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மத்திய அரசு ஊரடங்கு என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தபோதும் கூட, பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்தே பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து அசாம், ஆந்திரா மாநிலம், மேற்குவங்கம், கோவா ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.