ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு பத்தாவது படிக்கும் ஒரு 15 வயதான மாணவன் வசித்து வருகிறான் அவனுக்கு அடிக்கடி செல்போனில் பலான படம் பார்க்கும் பழக்கமுண்டு. அதனால் அந்த வயதிலேயே பாலுணர்வு உந்தப்பட்டு அவன் இருந்தான். மேலும் இந்த பலான படம் பார்க்கும் பழக்கத்தினால் அவன் இன்று சிறையில் இருக்கிறான்.
கடந்த வாரம் அந்த பகுதியிலிருக்கும் எட்டு வயதான சிறுமியொருவர் அங்குள்ள ஒரு கடைக்கு பாணி பூரி வாங்க வந்துள்ளார். அப்போது அந்த 15 வயதான சிறுவன் அந்த சிறுமியிடம் சென்று தான் இன்னும் அவருக்கு சாப்பிட நிறைய தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதாக கூறி ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்றுள்ளார். பின்னர் அங்கு அவர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் .
அதன் பிறகு அந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த சிறுமி அழுவதை பார்த்த அவரின் பெற்றோர் அந்த சிறுமியிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அப்போது அந்த சிறுமி அந்த சிறுவன் செய்த விஷயத்தை கூறினார். அதை கேட்டு அந்த பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த சிறுவன் மீது புகார் கூறினார்கள்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த பலாத்காரத்தை செய்து சிறுவனை கைது செய்தார்கள், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.