மஹாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி- விதல்நகர் பகுதியில் வசித்துவரும் சதாம் சலார் கான் பதான் என்பவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக வரலாற்று நாணயங்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் பதானின் வீட்டை சோதனை செய்தபோது, அவரது வீட்டில் 216 தங்க நாணயங்களை பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த நாணயங்களை சோதனை செய்தபோது அவை அனைத்தும் கி.பி 1720 முதல் 1750 வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்றும், ஒரு நாணயத்தின் மதிப்பு அறுபதாயிரம் ரூபாய் முதல் எழுபதாயிரம் ரூபாய் வரை இருக்கும் என்றும் என்றும் தெரிவித்தனர்.