இந்தோனேசியாவை சேர்ந்த தாயார் தனது டீன் ஏஜ் மகன்களுடன் சேர்ந்து ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறிய நிலையில் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். Wahyu Setyaning Budi என்ற 49 வயதான பெண் உலகளவில் சமீபத்தில் வைரலாகி தலைப்பு செய்தி ஆனார்.
அதாவது, தனது 2 டீன் ஏஜ் மகன்களுக்கு பாலியல் தொடர்பான விடயங்களை கற்பிக்க அவர்களுடன் சேர்ந்து ஆபாச படங்கள் பார்ப்பேன் என Wahyu கூறிய பின்னரே பிரபலமானார்.
இந்த சர்ச்சைக்குரிய விடயத்தை ஒரு யூடியூப் சேனிலுக்கு பேட்டியளித்த போது Wahyu கூறினார். அப்போது அவர் கூறுகையில், நான் பழைய காலத்திலேயே இருக்க விரும்பவில்லை.
என்னுடைய மகன்களான கேவின் ஓப்ரியண்ட் சலோமோ சியாஹான் மற்றும் செலோ ஒபியண்ட் சியாஹான் ஆகியோருக்கு நிஜ வாழ்க்கையில் பாலியல் தொடர்பில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைப் பற்றி கற்பிக்கும் முயற்சிக்காகவே ஆபாச படத்தை அவர்களுடன் பார்க்கிறேன்
என் பிள்ளைகளும் திறந்த மனதுடன் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் நம் குழந்தைகள் ஆபாச படம் பார்க்காமல் இருப்பது சாத்தியமில்லை.
ஏனெனில் அது எளிதாக அவர்களுக்கு கிடைக்கிறது என கூறியுள்ளார். எப்படியிருந்தாலும் Wahyuன் செயலை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.