ஜப்பானில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள அடாமி என்ற பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் இன்று காலையில் சுமார் 10:30 மணிக்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இதில் மலைப்பகுதியின் குடியிருப்புகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்துவிட்டது. இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது, 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் மின் கம்பங்கள் அனைத்தும் சரிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே ராணுவத்தினர், மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
A #landslide engulfs houses and leaves 19 people missing in #Japan 's Shizuoka region, a local official says, following days of #heavyrain . pic.twitter.com/9CqoJpVbpD
— Smriti Sharma (@SmritiS24856750) July 3, 2021