April 29, 2025, 12:44 AM
29.9 C
Chennai

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.இன்று 3ம் திருநாளான காலையில்
ஆண்டாள்,  பெருமாள் பல்லக்குகளில் எழுந்தருளினர்.

முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே பரவியிருந்தது. திருமலை, திருக்கடல் மல்லை, திருவிட வெந்தை,
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீமுஷ்ணம் போன்றவை தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்தன. வராஹப் பெருமான் பிராட்டிக்கு பல்வேறு உபதேசங்கள் செய்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இந்த உபதேசங்கள் மக்களிடம் சென்றடைய ஆண்டாளாக அவதரிக்கப் போவதாக வேண்டினாள் பிராட்டி. இத்தலத்தில் மூங்கில்குடி என்ற வம்சத்தில் முகுந்தர் என்பவருக்கு 4-வது மகனாக பெரியாழ்வாராக கருட பகவான் அவதரித்தார். நந்தவனக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்த பெரியாழ்வார், அங்கிருந்த திருத்துழாய்ச் செடியின் அடியில் ஆடிப் பூரத்தில் அவதரித்திருந்த பெண் மகவைக் கண்டு வியந்தார். வந்திருப்பது திருமகளேயென உணர்ந்தார். தமது பத்தினியான விரஜையிடம் கொடுத்து கோதை என பெயர்சூட்டி வளர்த்தார். ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை24,இல் தொடங்கியது. பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிகின்றனர். 28ம் தேதி கருட சேவை. ஆகஸ்ட் 1ம் தேதி தேர்த்திருவிழா. 10 நாட்களும் தங்கி ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க தகுந்த வசதிகள் இந்து அறநிலையத்துறை பாகவத உத்தமர்களால் செய்யப்பட்டு உள்ளன.

ALSO READ:  பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவத்தில் இன்று 3ம் திருநாளான காலையில்
ஆண்டாள்,  பெருமாள் பல்லக்குகளில் எழுந்தருளினர்.

இரவில் தங்க பரங்கி நாற்காலியில் ஆண்டாள் , அனுமன் வாகனத்தில் பெருமாள் எழுந்தரும் காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்புத்தூரில் குழுமியிருந்தனர் .ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று 2ம் திருவிழாவான காலையில்
ஆண்டாள் தங்கப் பல்லக்கு, பெருமாள் தந்தப் பல்லக்கில் எழுந்தருளினர். இரவில் சந்திர பிரபை மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினர்.

கண்ணபிரானை எண்ணி பாவை நோன்பு மேற்கொண்ட ஆண்டாள் நாச்சியார், கிருஷ்ணாரண்யம் எனப்படும் திருக்கண்ணபுரம் குறித்து
நாச்சியார் திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கண்ணபுரத்தில் நீலமேகப் பெருமாள், கண்ணபுர நாயகியுடன் எழுந்தருளி இருக்கிறார். உற்சவர் சௌரி ராஜன். ‘திருவேங்கடத்திலும், திருக்கண்ணபுரத்திலும் எந்தக் குறையுமின்றி மகிழ்ந்து உறையும் வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னோடு சேர்த்துக் கொள்வான் ஆகில் நீ கூடிடு கூடலே’ என்பது ஆண்டாள் பாசுரத்தின் எளிய விளக்கம்.

நாச்சியார் திருமொழியில் திருமாலிருஞ்சோலை அழகர் குறித்து ஆண்டாள் 11 பாடல்கள் பாடி உள்ளார். ‘நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு’ என்கிற பாசுரம் மூலம் அழகருக்கு 100 தடா வெண்ணெயும், 100 தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாக ஆண்டாள் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துதான் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அழகர் கோயிலில் அமர்ந்த நிலையில் ஆண்டாள் சேவை சாதிப்பது அரிய திருக்காட்சியாகும்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடரை வென்ற இந்திய அணி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories