spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்சோனியாவிடம் விசாரணை - எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல் கைது..

சோனியாவிடம் விசாரணை – எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல் கைது..

rahul.jpeg
20220726033L1

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றம் கூடியதுமே சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் வெளியேறிய காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.

அந்த பேரணியை விஜய் சவுக் பகுதியில் போலீசார், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சாலையில் அமர்ந்து ராகுல்காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். தர்ணா போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கோரிக்கை விடுத்தபோதும் அந்த கோரிக்கையை ராகுல்காந்தி ஏற்க மறுத்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்று தர்ணா போராட்டத்தி ஈடுபட்ட ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து காங்கிரஸ் எம்.பி.க்களையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் உண்மை மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சர்வாதிகாரத்தைப் பாருங்கள். இங்கு அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி விவாதிக்க முடியாது.

காவல்துறையையும், புலனாய்வு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்தி, எங்களைக் கைது செய்தாலும், ஒருபோதும் எங்களை அமைதிப்படுத்த முடியாது.’உண்மை’ மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்’ என்று பதிவிட்டுள்ளார். 

790950 raa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe