போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை வழியே துபாய் செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று மாலை கொழும்பு செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப் பொழுது சங்கரன் கோவிலை அடுத்த கடையநல்லூரைச் சேர்ந்த முகம்மது சதக் அப்துல்லா மகன் முகம்மது இஸ்மாயில் (41) அப்துல்லா என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்து கொழும்பு வழியாக குவைத் செல்லவிருந்தார்
இதனையடுத்து போலி பாஸ்போர்ட் சட்டப்படி பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.