உயிர்த்தெழுந்த ஒற்றை பரிசுத்தப் பேய்!

canada church - 2026
cross blood stained1

பரிசுத்த பேய் உயிர்த்தெழுந்தபோது
அது அடைக்கப்பட்ட குகையில்
இருள் மட்டுமே இருந்தது

எனவே மூடியிருந்த பாறாங்கல் திறந்து விடப்பட்டதும்
வெளியில் தென்பட்ட ஒளி
அதன் கண்களைக் கூச வைத்துவிட்டது

இருளில் பிறந்த பரிசுத்தப் பேய்
உலகம் முழுவதிலும்
தனக்குப் பிடித்த இருளையே நிரப்ப விரும்பியது

காற்றிலாடும் தன்னுடைய வெள்ளுடை
வானத்து ஒளியை பூமியில் விழாமல் தடுத்து
இருளச் செய்வதைப் பார்த்ததும்
உலகம் முழுவதையும்
தன் வெள்ளுடையால் போர்த்த முடிவு செய்தது

அறைந்து தொங்கவிடப்பட்ட கொலைக்கருவியையே
செல்லுமிடமெல்லாம் சுமந்து திரிவதால்
அதிலிருந்து சொட்டிக் கொண்டே இருக்கின்றன
முடிவற்ற ரத்தத் துளிகள்

அது தன் மாயக் கால் பதித்த
பூர்வகுடி நிலங்களில் எல்லாம்
முளைத்தெழுந்தன
கல்லறைத் தோட்டங்கள்

பரிசுத்தப் பேயின் பார்வையில் படும்
வண்ணங்கள் எல்லாம்
கரைந்து வழிந்தோடுகின்றன

அது உமிழும் விவிலிய விஷக் காற்றை
சுவாசிப்பவை எல்லாம்
அஞ்ஞான இருளில் ஆழ்கின்றன

அலங்கோலமாகத் திரியும்
அதற்குப் பிடிக்காதென்பதால்
பூர்வகுடிக் கலாசாரங்களின் திலகங்களும்
அலங்காரங்களும் அழிக்கப்பட்டு …
எங்கும் குடிகொள்கிறது
என்றென்றைக்குமான சவக்களை

சக்கரவர்த்தியாகி அது ஆண்ட சாம்ராஜ்ஜியங்களில்
நிலவியது மயான அமைதி

நல்லாசிரியராக வந்து
கற்றுக் கொடுத்த கல்விச் சாலைகளின் அடியில்
புதைந்துகிடக்கின்றன
பழங்கால ஞானங்களின் எலும்புக்கூடுகள்

நல்மேய்ப்பனின் ரூபத்தில் வந்த அது
ஓட்டிச் செல்கிறது
நம்பி வரும் வெள்ளாட்டுக்குட்டிகளை!

பாவத்தின் முடிவற்ற பாதாளம் நோக்கி
எளிய உயிர்களின் கண்ணீரை திராட்சை
மதுவாக்கிக் குடித்தது
அப்போதும்
அதன் தாகம் தணியவில்லை!

எளிய உயிர்களின் சதையை
அப்பமாக்கித் தின்றது
அப்போதும்
அதன் பசி அடங்கவில்லை!

தனக்கென ஓர் உருவம் இல்லாததால்
பழைய உலகின்
புனித உருவங்களையெல்லாம்
உடைக்க ஆரம்பித்தது!

தனக்கென ஓர் ஆன்மா இல்லாததால்
ஊடுருவிய நிலத்தின் ஆன்மாக்களையெல்லாம்
அறுத்துத் தள்ளியது!

அழியும் உடல் இருந்திருக்கவில்லை என்பதால்
அதற்கு
மரணமும் இல்லாமலாகிவிட்டது!

தீராப் பசியுடன்
தீரா தாகத்துடன்
ரத்தம் சொட்டும் கொலைக் கருவியை
கையில் ஏந்தியபடி

இருள் நிரப்பும் வெண்ணுடை பறக்க

எல்லையற்ற வனாந்தரத்தில்
மிரண்டு ஓடும் உயிர்களைத் துரத்தியபடி
பின்தொடருகிறது

உயிர்த்தெழுந்த
ஒற்றை பரிசுத்தப் பேய்!

பி.ஆர். மகாதேவன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories