இலங்கையில் கொத்துக் கொத்தாக கிறிஸ்துவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொன்றுப் போட்டுக் கொண்டிருக்க, தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள், ஹிந்துக்களை குறிவைத்துத் தாக்க வேண்டும் என்று மத வெறி பிடித்துப் பேசியவர்கள் இங்குள்ள கிறிஸ்துவ பாதர்கள்! இந்த வீடியோ சமூகத் தளத்தில் வைரலாகி, கிறிஸ்துவ மதவெறிக் கொலைகாரர்களின் யோக்கியதையை சந்தி சிரிக்க வைத்தது.
சினிமாக்களில் மட்டுமே அன்பினை போதிப்பதாக காட்சிகளில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கொலைகாரர்கள், நேரடியாக வாள் எடுத்து வந்து கொலை செய்து மற்ற மதத்தவரை அழித்து எண்ணிக்கையைக் குறைப்பவர்கள் இல்லை. இவர்கள் மூளை சலவை எனும் விஷ மாத்திரையைக் கொடுத்து, எதிர் மதத்தினரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பவர்கள்.
தமிழகத்தில் எஸ்ரா சற்குணம் எனும் ‘இந்து மத சார்பற்ற’ திமுக.,வின் ஆஸ்தான பாதிரியார், பொன் பரப்பியில் போய் ஜாதிக் கலவரத்தை மீண்டும் தூண்டி விடும் வகையில் பேசுகிறார். அங்கே, இந்த நபருக்கு என்ன வேலை என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.
இந்த நபர் அங்கே போய் சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுகிற வரையில், அரசும் காவல்துறையும் என்ன செய்கிறது? ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது? என்று மனம் குமுறுகிறார்கள் அங்குள்ள மக்கள்!
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் #ராமதாஸை மரம் வெட்டி என்று திட்டுகிறார். நீ எப்படி சத்திரியன் ஆனாய் என்று கேட்கிறார்! நீயும் தலித் தான் என்கிறார்! இப்படி சாதிப் பிரிவினை பேசி அரசியல் செய்ய, அந்த மக்களுக்கு நடுவே போய்ப் பேசும்வரையில், அரசுத் துறை என்ன வாயில் விரல் வைத்து சூப்பிக் கொண்டா இருக்கிறது?!
பிற மத வெறியர்கள் தான் இந்துக்களிடையே சாதிப் பிரச்னையைக் கிளப்பி விடுகிறார்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த விவகாரத்தில், எஸ்ரா சற்குணம் கைது செய்யப் பட்டால்தான், மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும் என்றும், இல்லாவிட்டால், பொன்பரப்பிகளும் பொன்னமராவதிகளும் தமிழ்நாடு முழுக்க வேர் விட்டுக் கிளம்பும் என்றும், அதன் பின்னணியில் திமுக.,வின் சதிச் செயல் இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் பொதுமக்கள்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் குலைத்துவிட்டு, ஆட்சியைப் பிடிக்கும் மிகக் கீழ்த் தரமான நடவடிக்கைகளில் திமுக., இப்போது இறங்கியிருக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என பார்ப்போம்!
– வலையோடி