வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக தேர்தல் பதிவான தபால் வாக்குகள் எண்ணப் பட்டன. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். அதிமுக வேட்பாளர் 1127 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார்.
வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில், காலை 10 மணி நிலவரப்படி அதிமுக வேட்பாளர் 9083 வாக்குகளில் முன்னிலை பெற்றார்.
பின்னர் தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப் பட்டு வருகின்றன. அதிமுக., கூட்டணி, திமுக., வேட்பாளர்களுக்கு இடையே முன்னிலை பெறுவதில் இழுபறி நிலை நீடித்தது. இருவரும் சம எண்ணிக்கையில் தொடர்ந்து வாக்குகள் பெற்றனர். தொடக்கத்தில் திமுக., வேட்பாலர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இருப்பினும் அடுத்தடுத்த சுற்றுகளில் அதிமுக., கூட்டணி வேட்பாளரின் முன்னிலை வித்தியாசம் சற்று அதிகரித்து வந்தது.
அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் 1,21,063 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,11,980 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்தார். தற்போது 10.30 மணி நிலவரப் படி,
அதிமுக வேட்பாளர் 1,32,015 வாக்குகளும், திமுக வேட்பாளர் 1,17,332 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதிமுக., வேட்பாளர் முன்னிலை பெற்றிருந்தார். நோட்டா வுக்கு 2,321வாக்குகள் பதிவாகியிருந்தன.