மதுரை : கோவிட் மரணங்களை மறைக்கவில்லை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உள்ள கச்சைகட்டியில் காய்ச்சல் முகாமினை தொடங்கி வைத்து அதன்பின் கூட்டுறவு வங்கியின் சார்பில் விவசாயிகளுக்கு 23 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 லட்சம் கடனுதவி வழங்கியை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கே மாணிக்கம்,மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன் ,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஐ.தமிழழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காசிமாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது ;
இந்த நான்கு மாதத்தில் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கோவியட் நோயை கட்டுப்படுத்த வண்ணம் முதலமைச்சர் பல்வேறு போர் கால நடவடிக்கைகளை எடுத்து இரவு பகலாக பாடுபட்டு வருகிறார்
இதுவரை 21லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மாதிரி பரிசோதனை செய்யபட்டுள்ளது இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை செய்யபட்டுள்ளது
இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 86 ஆயிரம் மேற்பட்டோரை கண்டறியப்பட்டு இதில் இதுவரை 1,36,793 நபர்களை மருந்தே இல்லாமல் குணப்படுத்தி உள்ளோம் மதுரை மாவட்டத்தில் 8,984 நபர்களை கண்டறியப்பட்டு அதில் 5,965 நபர்களை குணப்படுத்தி உள்ளோம்
அதேபோல் கிராமப் பகுதிகளில் இந்த தொற்று நோய் ஏற்படா வண்ணம் முதலமைச்சர் கிராமங்கள் தோறும் காய்ச்சல் முகாமை நடத்த உத்தரவிட்டிருந்தார் அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது இதில் 1,56,289 மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது சளி பரிசோதனை 1,10,864 நபர்களுக்கு செய்யப்பட்டுள்ளது
இந்த கொரோனா பணிக்காக தமிழகம் முழுவதும் இதுவரை 15 ,000க்கு மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோரை முதலமைச்சர் நியமித்துள்ளார் மதுரை மாவட்டத்தில்இந்த கொரோனா நோய் பணிக்காக 730 மருத்துவர்களும், 890 செவிலியர்கள், 3,800 களப்பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்
அதேபோல் மக்களின் தற்போதுள்ள உணர்வுகளை உள்வாங்கி முதலமைச்சர் செயல்படுகிறார் கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங் ,பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ரத்துசெய்து அடுத்த ஆண்டு கல்வி ஆண்டில் சேரலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது ஒட்டுமொத்த பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
அது மட்டுமல்லாது உலகமே இந்த நோயின் தாக்கத்தால் இருக்கும் பொழுது தமிழகத்தின் பொருளாதாரத்தை உயத்திடும் வண்ணம் இந்த நான்கு மாதத்தில் 30,664 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்த்து இதன்மூலம் 67,222 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளார்
இப்படி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தை ஈர்த்து சாதனை படைத்து வரும் நமது முதலமைச்சரையும் செயல்பாட்டினை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் தீய எண்ணத்தின் வடிவமாக இருக்கும் ஸ்டாலின் கொரோனா இறப்பைப் பற்றி பொய் கணக்கு என்று அரசியல் உள்நோக்கத்துடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இன்றைக்கு தமிழகம் மட்டும்தான் நாள்தோறும் இந்த தொற்று நோய் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறது எதையும் மூடி மறைக்கவில்லை தமிழக அரசின் செயல்பாட்டை அனைவரும் பாராட்டுகின்றனர்
ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 4,44 கோவியட் இறப்புகள் மறைக்கவில்லை இந்த 4,44நபர்களும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இவர்களுக்கு இணை நோயினால் இறந்தவர்கள் ஆனாலும் இவர்களை கோவியட் கணக்கில் சேர்க்கலாமா என்று பொது சுகாதார மாநில துணை இயக்குனர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
அதில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி இணை நோய் இருப்பவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு மரணமடைந்தாலும் அது கோவியட் மரணமாக கருதப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி தமிழக அரசு அறிவித்தது
ஆனால் ஸ்டாலின் உண்மை நிலையை அறியாமல் பீதி ஏற்படுத்தும் வண்ணம் மரணத்தில் பொய்க்கணக்கு என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்
பொய் கணக்கு எழுதுபவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் பொய்க்கணக்கு எழுதி ஊழல் செய்து அதன்மூலம் இந்தியாவிலேயே கலைக்கப்பட்ட ஆட்சி திமுகதான்
தினந்தோறும் அம்மா அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள ஸ்டாலின் யார் யாரையோ எழதி கொடுப்பதை வாசித்துக் கூடப் பார்க்காமல் அப்படியே வெளியிடுகிறார் ஏட்டுச் சுரைக்காய் வீட்டுக்கு உதவாது அதுபோல் ஸ்டாலின் அறிக்கை ஒருபோதும் மக்களுக்கு பயன்தராது என்று கூறினார்
- ரவிச்சந்திரன், மதுரை