ரெவின்யு தருபவர்... வாங்கி வைக்கிற பிள்ளையாரை விட... திருடிட்டு வந்து வைக்கிற பிள்ளையார் தான் பலன் நெறய்ய தருவார்னு சொல்லுவாய்ங்க... இப்ப வேற நாம பிச்சைக்கார அரசுல வேல செய்யிறமா...?! அட்லீஸ்ட் இவராச்சும் நமக்கு ரெவின்யு பெருகச் செய்து... இந்தப் பிச்சைக்காரத்தனத்துக்கு ஒரு முடிவு கட்ட மாட்டாரா...?! ஏக்கத்துடன் பாக்கோம்... ஆமா ஏக்கத்தோட கடத்திட்டுப் போய்ப் பாக்கோம்...
காலம் பதில் சொல்லும் !
இந்த கொடுமையெல்லாம் இந்துக்களுக்கு விழிப்புணர்வு வரும்வரை தான் !
தமிழ்நாடு முழுதும் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கைது செய்து இருக்கிறார்கள் !
பொது இடங்களில்தானே விநாயகர் வைக்க தடை என்றார்கள் ?!
தனியார் இடங்களில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை ஏன் வலுக்கட்டாயமாக அகற்றினார்கள் ?!
களிமண்ணைக் கொண்டுவந்து நம் கண்முன்னே ‘அச்சு’ வைத்து பிள்ளையார் சிலை செய்து தருவார்களே , அந்த தொழிலாளர்களை அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டுவந்த மண்ணோடு சேர்த்து அகற்றியுள்ளார்கள் .
இன்னும் இன்னும் பல அட்டூழியங்கள் !
இந்துக்கள் இரண்டாம்தர குடிமக்களா ஸ்டாலின் அவர்களே ?!
இதையெல்லாம் வெறும் கொரானாவுக்காக மட்டும் நடக்கிறது என மூளை உள்ள யாரும் நம்புவார்களா ?!
-அ.அஸ்வத்தாமன், பாஜக