பாரதி-100: பாரதி படையல்!

chellamma-bharathi
chellamma-bharathi

தேசியக்கவியின் நூற்றாண்டு நினைவில்…
தினம் தினம் – பாரதி தினம்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நூற்றாண்டை தேசிய எழுச்சி ஆண்டாக நாம் கடைப்பிடிக்கிறோம்.

இந்த ஆண்டு முழுதும், பாரதியார் குறித்த கட்டுரைகளை ஒவ்வொரு நாளும் பல்வேறு எழுத்தாளர்கள், அன்பர்களிடம் இருந்து பெற்று நம் தமிழ் தினசரி ( https://dhinasari.com ) தளத்தில் பதிவு செய்யவுள்ளோம்…

கட்டுரைகளை அன்பர்கள் dhinasarinews@gmail.com இமெயிலில் அனுப்பி வைக்கலாம்.

barathiyar
barathiyar

பாரதி ! – எனக்கும் அவனுக்குமான உறவை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை…..
இளம்பிராயத்திலேயே என் அம்மாவால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் இந்தப் பெருங்கவிஞன்….
அவன் கைபிடித்தே வளர்ந்தேன்…..
அழுகை வந்தால் அவனிடமே சாய்ந்தேன்….

மொழி , நாட்டுப்பற்று, இறை பக்தி, காதல் , நிலையாமை , தவம், ஞானம் என அருகேயேயிருந்து அத்தனையும் சொல்லிக்கொடுத்தான்…..

அவனால் வளர்க்கப்பட்ட ஆயிரமாயிரமானவர்களுள் நானும் ஒருவன் !

பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு முந்தைய நாள்,
அறிவியல் பாடத்தில் ஐயம் ஒன்றை தீர்க்க ஆர்வமுடன் வீடு வந்தான் நண்பனொருவன் ,
ஒரு புத்தகத்தில் முகம் தோய்த்து, கண் கலங்க இருந்த என்னை உசுப்பினான்…..

நாளைக்கு பொதுத் தேர்வை வைத்துக் கொண்டு பாரதியின் கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறாயே அஸ்வத்?!?! என்றான். இன்றும் அடிக்கடி சொல்வான், இந்த சம்பவத்தை……

இங்கு பாரதியின் தாக்கமின்றி ஒரு தமிழனும் வாழ்வதில்லை…

அப்படி , பாரதியின் தாக்கம் ஒருவனிடம் இல்லாமல் போனால் அவன் தமிழனே இல்லை !

இன்று , அவன் சொல்லிக்கொடுத்த தமிழ் பாசம், நாட்டுப்பற்று , இறை பக்தி, அத்தனையையும் தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறது இந்த திருட்டு திராவிடம் !

“சாதிகள் இல்லயடி பாப்பா” என்று சொன்னவனையே சாதி பார்த்து ஒதுக்கி வைத்த இந்த திராவிடம் …..

“தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற வசை என்னால் அழிந்தது” என்று பாடிய பாரதியின் வாரிசுகள் ,
நம் கண் முன்னமே …

“மெல்ல ” அல்ல….

மிக வேகமாக அழித்துக் கொண்டிருக்கிறது நம் தமிழ் மொழியை!

‘தமிழ் எழுத்துக்களை அழித்துவிட்டு அகர வரிசைப்படி ஆங்கிலத்தில் எழுதுங்கள் ‘ என அறை கூவல் விடுத்த அறிவிலி ஈவேரா வின் குஞ்சுகள் , தங்கள் தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டு தமிழை சீரழிக்க எடுத்த முயற்சியின் வாயிலாய்….

ஒரு மொழியாய் மட்டுமே கல்வியில் , சுருக்கி,
பின் அதனையும் அவசியமில்லை என்றாக்கி ,
இன்று நம் இளம்தலைமுறைக்கு தமிழ் எழுத்துக்கள் தடுமாறுகிறது.

இதை சொன்னால், அதெல்லாம் எனக்கு தமிழ் தெரியும் என்று சொல்லிவிட்டு கடக்கும் தமிழா ?! உனக்கு தெரிந்தால் போதுமா உன் பிள்ளைக்கு தெரியுதா ?!

தமிழ் எழுத்துக்கள் அன்னியமாய்ப்போய் , ஆங்கிலத்தில் தமிழை எழுதும் அவல நிலைக்கு எல்லாம் போனால்….

எழுத்தக்களற்ற, பேச்சு வடிவம் மட்டும் கொண்ட “நரிக்குறவர் பாஷை” போல மாறிடாதா , நம் தமிழ் !

இதற்குதானே ஆசைப்பட்டான் அந்த ஈவேரா எனும் ஈனக்கிழவன்!

எழுத்துகளற்ற மொழியை செம்மொழி என சொல்லுமோ இவ்வுலகம் ?!

எண்ணிப்பார்க்க வேண்டாமா , உலகிற்கு சொல்லிக்கொடுத்த தமிழ் சமூகம் ?!

தேசிய கல்விக் கொள்கை மூலமே கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது நம் தமிழ். திணிப்பென்ற ஒன்று இருக்குங்கால், இங்கு திணிக்கப்பட்டிருப்பது அன்னைத் தமிழே !

ஆம் !

ஒரு மொழியாகக்கூடப் படிக்கத் தேவையில்லை என்ற நிலை மாற்றி ,
‘ பயிற்று மொழி’ யே தமிழ் என பறை சாற்றுகிறது இந்தக் கொள்கை.

அரசியல் அற்பங்கள் தாண்டி சற்று அறிவுக்கு வேலை கொடுப்போம் !

அன்னைத் தமிழ் வாழ கிடைத்திருக்கும் இந்நல்வாய்ப்பை ஏற்போம் !

‘தமிழ்த் துரோகி’யாம் திராவிடத்தை தடமின்றி பொசுக்க பாரதி கண்ட அக்கனிக் குஞ்சுகளாய் உருவெடுப்போம் !

வாருங்கள் தமிழர்களே !

~ அ. அஸ்வத்தாமன், பாஜக


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories