சென்னை:
ஓ.பன்னீர்செல்வம் அணியில் தஞ்சையின் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் இணைந்துள்ளார். மேலும் 500 பேர் இன்று ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர்.
சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தையும் பெற ஓபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாநகர முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து அந்த அணியில் இணைந்துள்ளார். மேலும் 500க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர்.