சிதம்பரம்:
டிடிவி ஆதரவு வழக்கறிஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தலைமைக் காவலர் ரவியை, வழக்கறிஞர் பிரபு என்பவர், செல்போனில் தரக் குறைவாகவும், ஆபாசமாகவும் தகாத முறையிலும் பேசியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது . இதை அடுத்து, பிரபு மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் போலீஸார்.
புகாருக்கு உள்ளான வழக்கறிஞர் பிரபு, அதிமுகவில் டிடிவி தினகரன் ஆதரவாளராக உள்ளார். மேலும், டிடிவி தினகரன் அணியின் வழக்கறிஞர் பிரிவிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது