Home Blog Page 6180

சனிக்கிழமை கடையடைப்பு: முதல்வருடன் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு சந்திப்பு

சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மார்ச் 28ம் தேதி முழ்க் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து விளக்கினர். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது உள்பட 3 இடங்களில் தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை தொடங்க கர்நாடக அரசு பட்ஜெட்டில் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தடுப்பணைகள் கட்டினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து விடும் என்பதால் மேகதாது திட்டத்துக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் மேகதாது தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கங்களும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பிரச்சனையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வருகிற 28–ந்தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேகதாது தடுப்பணைத் திட்டம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் காவிரி படுக்கையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறது. இதை அடுத்து அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று கோட்டைக்கு சென்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். அப்போது 28–ந்தேதி முழு அடைப்புக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆபாச செல்பி படத்தை மனைவி வெளியிட்டதால் விவாகரத்து கேட்டு வெளியேறிய அரசியல்வாதி!

உக்ரைனை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் மனைவி, தனது ஆபாச செல்பி படத்தை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டதால் அதிர்ச்சி அடைந்த கணவர், வீட்டை விட்டு வெளியேறியதோடு, விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். உக்ரைனை சேர்ந்த அரசியல் தலைவர் அலெக்சாண்டர் பொலிடுகா. இவரது மனைவி அலியோனா பொலிடுகா (32). இவர்களுக்கு ஒரே ஒரு மகன். இவர்கள் கிழக்கு உக்ரைனில் உள்ள டெர்கெஜிவ்ஸ்கை மாவட்டத்தில் வாழ்ந்து வந்தனர். அலெக்சாண்டர் லோக்கல் கவுன்சிலின் தலைவராக இருந்து வந்தார். மேலும் சோப்பு தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். தன்னை ஆதரிப்பதற்காக உக்ரைன் ராணுவத்திற்கு இவர் அதிக பணம் நன்கொடையாக கொடுத்து உள்ளார். இவர் ஒருபோதும் பகிரங்கமாக தனது மனைவியின் சமூக ஊடக நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்ததில்லை. இந்தநிலையில், அலியானா தனது ஆபாச செல்பி படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டுள்ளார். தனது படங்களை தானே அப்லோடு செய்துள்ள அலியானா, தங்க நிற ஸ்மார்ட் போனுடன் மெல்லிய இடுப்பை காட்டியபடி பல படங்களை போட்டுள்ளார். இது உலகம் முழுவதும் பரவி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மனைவியின் ஆபாச செல்பி படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலெக்சாண்டர், மனைவி மற்றும் மகனை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கணவர் வீட்டை வீட்டு வெளியேறியது குறித்து அலியானா தனது சமூக வலைதளத்தில், “இப்போது என் வாழ்க்கையில் ஒரு கடினமான நேரமாக இருக்கிறது. நான் ஒரு தாய். எனது கணவர் மற்றும் எனது மகன் எனக்கு வேண்டும். நாங்கள் திருமணம் முடித்து 10 ஆண்டுகள் ஆகிறது. திடீரென எனது கணவர் வீட்டை விட்டு போய் விட்டார். எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை. எனது மகனை விட்டும், என்னை விட்டும் அவர் சென்று விட்டார். எங்களுக்கு வாழ்வாதரம் இல்லை. எந்தவித ஆதரவும் இல்லை” என்று கூறியுள்ளார். அலியானாவுக்கு பலர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள போதிலும், ஆபாச படங்களை வெளியிட்டது தவறு என சுட்டிக்காட்டி உள்ளனர்.

மருத்துவம்: பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்ன? இன்று, பரவலாக காணப்படும் ‘ஸ்வைன் ப்ளு’விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே ‘பன்றிக்காய்ச்சல்’ என்கின்றனர். 2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்? பொதுவாக, இவை குளிர்காலங்களில் அதுவும், வசந்த காலம் என்று அழைக்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக தோன்றும். வசந்த காலங்களில் உடலில், கபம் இயற்கையாகவே அதிகரிக்கிறது. இதனால் சளி, இருமல், தலைக்கனம், தும்மல் மூச்சுத்திணறல், ஜுரம் போன்றவை மக்களிடையே பரவலாக காணப்படும். 3 கப ஜுரம் எப்படி பரவுகிறது? பாதிக்கப்பட்ட, நோயாளி தும்மினாலோ, இருமினாலோ கிருமிகள், காற்றின் மூலம் பரவி, மற்றவர்க்கு தொற்றிக் கொள்ளும். வசந்த காலங்களில், மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், மக்களை அதிகம் தாக்கும். 4 கப ஜுரம் யாரை அதிகம் பாதிக்கும்? சுகாதாரம் அற்ற, நெருக்கமான இடங்களில் வசிப்போர், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், ஆஸ்துமா நோயாளிகள் போன்றோரை, எளிதில் பாதிக்கும். 5 கப ஜுரத்தின் அறிகுறிகள்? மூக்கு ஒழுகும்; மூக்கடைப்பு, தும்மல் வரும்; சளி, இருமல், காய்ச்சல், தலைக்கனம், உடல்வலி, மூட்டு வலி, கைகால் வலி கடுமையாகும்; உடல் சோர்வு இருக்கும்; பசியின்மை, சளியுடன் கூடிய ஜுரம் என, படிப்படியாக அறிகுறிகள் அதிகரித்து கொண்டே போகும். 6 கப ஜுரம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? வசந்த காலத்தில், கபத்தை எதிர்க்கும் தன்மை உடைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேநேரம், கபம் தாக்காதவாறு, நம் பழக்க வழக்கங்களை அமைத்து கொள்வது முக்கியம். 7 கப ஜுரம் இருந்தால், உணவு முறையில் மாற்றம் தேவையா? குளிர்ந்த உணவு, குளிர் பானங்கள், பழரசங்கள், இனிப்பு மற்றும் புளிப்பு மிகுந்த உணவு பொருட்கள், கபத்தை அதிகரிக்க செய்யும். அதுமட்டுமல்லாமல், உணவில் தயிர், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்வதை குறைத்து கொள்ளலாம். பகல் நேரத்தில் உறங்க கூடாது. பகல் உறக்கம், நெஞ்சில் கபத்தை அதிகரிக்க செய்யும். 8 கப ஜுரம் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? கப ஜுரம் தாக்கிய நோயாளியுடன் சேர்ந்து உறங்குவது, ஒரே தட்டில் உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பதன் மூலம், கப ஜுரம் பரவுவதை தவிர்க்கலாம். மேலும், தும்மல், இருமலின் போது, கைக்குட்டையால் மூக்கை மறைத்து கொள்வதன் மூலம், கிருமிகள் காற்றில் பரவாதவாறு தடுக்கலாம். 9 கப ஜுரம் முற்றிலும் குணமாக, ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளனவா? இதுபோன்ற ஜுரங்களுக்கு, ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் சிறந்த சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன. கபத்தையும், ஜுரத்தையும் குறைக்கும் சூரணங்கள், கஷாயங்கள், பஸ்பங்கள், அரிஷ்டங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், பல சக்தி வாய்ந்த ரஸ மருந்துகள், எந்தவிதமான தீவிரமான ஜுரத்தையும் குறைக்கும் குணமுடையவை. 10 கப ஜுரத்திற்கு, ஆயுர்வேதத்தில் தடுப்பு மருந்துகள் உள்ளனவா? உடலில், கபம் அதிகரிக்காமல் இருக்க, நல்ல மருந்துகள் மற்றும் சூரணங்கள் உள்ளன. ‘சுதர்சனம்’ மாத்திரை மற்றும் ‘தாலிசாதி’ சூரணம் போன்ற மருந்துகள் கப ஜுரம் வராமல் தடுக்கும் வல்லமை பெற்றவை. வசந்த காலங்களில், சளி தாக்கியதும் உடனே, ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. – பி.எல்.டி.கிரிஜா ஆயுர்வேத மருத்துவர் சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவமனை 044 – 24414244

பேரக் குழந்தைகள் விளையாட சிங்கக் குட்டிகளை வாங்கித் தந்த தாத்தா

lions-boys பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான எல்லைப்பகுதியான காஸாவில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு 2 சிங்கக் குட்டிகளை விளையாட்டு தோழனாக வாங்கி தந்துள்ளது.

இங்குள்ள ரஃபா நகரில் வசிக்கும் பாலஸ்தீன அரசு ஊழியரான சயிட் எல்டின் அல்-ஜமால்(54) என்பவர் உள்ளூரில் உள்ள ஒரு வன விலங்கு காப்பகத்தில் இருந்து இந்த சிங்கக் குட்டிகளை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் உள்ள பேரன், பேத்திகளுடன் விளையாட விட்டிருக்கிறார். தற்போது இரண்டரை மாத குட்டிகளாக இருக்கும் இந்த சிங்கங்களிடம் இன்னும் சில நாட்களுக்கு மேல் குழந்தைகள் விளையாடி மகிழ முடியாது என கவலை தெரிவிக்கும் இவர் வளர, வளர சிங்கங்களுக்கு ரத்தவெறி ஏற்படுவது இயல்பானதுதான் என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார். நான்கு மாதங்களாகி விட்டால் இவை ஆபத்தானவை ஆகிவிடும். ஆறு மாதங்களாகி விட்டால் மிக, மிக ஆபத்தானவையாக மாறிவிடும். எனவே, இன்னும் ஒரு மாதத்தில் இந்த குட்டிகளை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைக்க முடிவு செய்துள்ளேன். காஸாவில் இருக்கும் யாராவது வாடகைக்கு கேட்டால் இவற்றை காட்சிப் பொருளாக வாடகைக்கு விடலாமா? என்று யோசித்து வருகிறேன் என இவர் கூறுகிறார்.

லிம்காவுக்கு ஆசைப்பட்டு தலையைக் கொடுத்த பாம்பு: வெளியே வரத் திணறல்

limca-can-snake புதுச்சேரி அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று காலி கூல்டிரிங் டின்னுக்குள் தலையை விட்டு மாட்டிக் கொண்டது. புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் டி.புதுக்குப்பம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பர் தனது வீட்டில் குடும்பத்துடன நேற்றிரவு தூங்கி கொண்டு இருந்தார். காலை 6 மணியளவில் வீட்டில் புஸ்… புஸ்… என சத்தம் வந்ததையடுத்து ரமேஷ் எழுந்து சென்று பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டில் ஒரு சந்து பகுதியில் 5 அடி நீள நல்ல பாம்பு ஒன்று காலி கூல் டிரிங் டின்னுக்குள் தலையை விட்டபடி ஊர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பாம்பை விரட்டவும் முடியாமல், அடித்து கொல்லவும் முடியாமல் பயந்து நடுங்கிய ரமேஷ், இதுபற்றி தனது நண்பர் ஜோதிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். நண்பரின் வீட்டுக்கு வந்த ஜோதி, குளிர்பான டின்னில் இருந்து பாம்பின் தலையை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், முடியவில்லை. இதனால், பாம்பு மேலும் வலி தாங்க முடியாமல் துடித்துள்ளது. ரமேஷ் குடும்பத்தினர் குளிர்பானத்தை குடித்து விட்டு காலி டின்னை வைத்திருந்தபோது, நல்ல பாம்பு குளிர்பானம் குடிக்கும் ஆசையில் அந்த டின்னுக்குள் சிக்கி கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து குளிர்பான டின்னுடன் நல்லபாம்பை பிடித்து ஒரு சாக்கு பையில் போட்டு திருக்கனூர் கடை வீதிக்கு கொண்டு வந்தார் ரமேஷ். கடை வீதியில் வைத்து சாக்கு பையை திறந்ததும், நல்ல பாம்பு சாக்கு பையில் இருந்து வெளியேறி குளிர்பான டின்னுடன் அங்கும், இங்குமாக ஓடியது. இதனை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் ஜோதி, அந்த நல்ல பாம்பை பிடித்து மீண்டும் சாக்கு பையில் அடைத்தார். உடனே இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர் கண்ணதாசன், பாம்பின் தலையில் சிக்கியிருந்த கூலடிரிங் டின்னை லாவகாமாக அகற்றினார். அதன் பின்னர் அந்த பாம்பை அதே சாக்கு பையில் அடைத்து எடுத்துச் சென்றார்.

நான் குழந்தை பெற உதவினால் பணம் தருவேன்: பேஸ்புக்கில் இளம்பெண் பகீர் பதிவு!

எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம் தருவேன் என்று ஒரு இளம்பெண் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்த 25 வயதான அடிலினா அல்பு, தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அளித்துள்ள பதிவு ஆண்களின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது. அடிலினா அல்பு தனது ஃபேஸ் புக் பக்கத்தில், ”மனதளவில் ஆண்கள்எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது பிரச்சனை இல்லை. ஆனால், குழந்தை தேவைப்படும் ஒரு ஆணை சந்திப்பதே பிரச்சனை.

அதற்காக, எந்த உபயோகமும் இல்லாத உறவில் என் நேரத்தை வீணடிப்பதை நான் விரும்பவில்லை. நான் குழந்தை பெற உதவுபவர்களுக்கு 350 பவுண்ட் பணம் தருகிறேன். உங்களுக்கு சுகம், எனக்கு குழந்தை அவ்வளவுதான். இதற்கு சம்மதிப்பவர்கள், மருத்துவரிடம் கருவுறும் சோதனை செய்துவிட்டு வர வேண்டும். மேலும், பெற்றோர் உரிமைகளை எனக்கே அளித்துவிட வேண்டும். ஆண்கள் முதிர்ச்சியடையாதவர்கள், எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். நான் முதிர்ச்சியடைந்தவள், சுதந்திரமானவள், எனக்கு ஒரு குழந்தை தேவை” என்று பதிவு செய்துள்ளார். பல பேஸ்புக் பயனாளர்கள், அடிலினாவின் பதிவுக்கு முகம் சுளிக்க வைக்கும் விமர்சனங்களை குவித்தபடி இருந்தாலும், அவரது சுதந்திரமான குணத்தை சிலர் பாராட்ட தவறவில்லை.

த.மா.கா., மீண்டும் காங்கிரஸுடன் இணைய வேண்டும்: கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள்

கோவை: த.மா.கா., மீண்டும் காங்கிரஸுடன் இணைய வேண்டும், ப.சிதம்பரத்தின் தலைமை இல்லாமல், தமிழக காங்கிரஸ் கமிட்டி மக்கள் இயக்கமாகவோ, மக்கள் கவனத்தை ஈர்க்கும் இயக்கமாகவோ பரிணமிக்காது,” என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதனால் சிதம்பரம்- இளங்கோவன் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கோவையில் புதன் அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் கட்சி உறுப்பினர்கள் 6 பேரை நீக்கி மாவட்டத் தலைவர் அறிவிக்கை செய்தார். அது சட்டத்துக்கு மாறானது என்பதை நானும், எனது தந்தை ப.சிதம்பரமும் தெரிவித்தோம். இதையடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்ததால், கோவை மாவட்ட காங்கிரஸ் அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறது. சட்டத்துக்கு மாறாக, தவறான நடவடிக்கை எடுத்த கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பதோடு, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முன்னாள் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமை, பரிந்துரை, அறிவுரை, ஒத்துழைப்பு இல்லாமல், தமிழக காங்கிரஸ் கமிட்டி மக்கள் இயக்கமாகவோ, மக்கள் கவனத்தை ஈர்க்கும் இயக்கமாகவோ நிச்சயம் பரிணமிக்காது. கூட்டுத்தலைமையின் மூலமாக எல்லோருடைய பரிந்துரையை கேட்கும் பக்குவத்தோடு கட்சி செயல்பட வேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக வேண்டும். சிவகங்கையில் ஆரம்பத்தை துவக்கியிருக்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டேன். அங்கு அனைத்து பிரதிநிதிகளை கூட்டி மாநாடு நடத்தினேன். அதேபோல் தமிழகம் முழுவதும் காங்கிரசார் மாநாடு நடத்த வேண்டும் த.மா.கா. தனியாக கட்சி நடத்த எந்த அரசியல் காரணமும் இல்லை. எனவே த.மா.கா. மீண்டும் காங்கிரசுடன் இணைய வேண்டும். இலங்கைக்கு காங்கிரஸ் சார்பில் சென்ற பிரதிநிதிகளை கண்டித்த திராவிடக் கட்சிகள், மோடி செல்வதை வாய் மூடி பார்த்திருப்பது ஏன்? அதேபோல் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் இலங்கை அணுகுமுறை பற்றிய வெள்ளை அறிக்கை தர வேண்டும்,” என்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், நான் முதல்வராக வாய்ப்பே கிடையாது என்றார். “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மாஜிஸ்திரேட் கார் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடக்கிறது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் பால்குடம், மண் சோறு, காவடி தூக்குவது போன்ற வேலைகளை செய்கிறார்களே தவிர அரசு நிர்வாகத்தை கவனிப்பதில்லை” என்றார் அவர்.

குடிமகன்களை மீண்டும் டாஸ்மாக் வரவைக்க புது உத்தி

டாஸ்மாக் கடைக்கு மீண்டும், மீண்டும் குடிமகன்களை வரவழைப்பதற்காக சில்லறைக்கு பதில் டோக்கன் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், எடையூர் சங்கேந்தி மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. முக்கிய சாலையில் இருப்பதால் இந்த கடையில் எப்போதும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதும். மேலும், இங்கு மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக ரூ.5 வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானங்கள் வாங்கும் குடிமகன்களுக்கு சில்லறைக்கு பதில், அந்த கடையின் எண் சீலிட்ட அட்டையை வழங்குகின்றனர். ஒரு அட்டையின் விலை ரூ.5. இரண்டு அட்டை வைத்திருந்தால் அதன் மதிப்பு ரூ.10. இந்த டோக்கன்களை குடிமகன்கள் அங்குள்ள பார்களிலோ அல்லது பக்கத்திலுள்ள பெட்டிக்கடையிலோ கொடுத்து அவர்களுக்கு தேவையான சைடிஸ் மற்றும் மற்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் அந்த டோக்கன்களை மொத்தமாக டாஸ்மாக் கடையில் கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்வார்களாம். இந்த டோக்கன்களை மாற்றுவதற்காகவே மீண்டும், மீண்டும் மதுபானக் கடைக்கு வரவேண்டியுள்ளது என புலம்புகின்றனர் குடிமகன்கள். மேலும், இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதும் அவர்களின் கேள்வியாக உள்ளது.

ப்ள்ஸ் டூ விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தேர்வு பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதைக் கண்டித்தும், பணி வழங்க வலியுறுத்தியும்,இது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வேண்டியும் மாணவர்கள் தேர்வு அறைக்கு வரும் முன் சோதனை செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு இல்லாத போது ஒழுங்கினமான மாணவர்களால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக கூறி தமிழ்நாடு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஒருமணி நேரம் தேர்வு தாள்களை திருத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுமார் 200ஆசிரியை,ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை பூமியைக் கடக்கிறது மிகப் பெரும் விண்கல்

astroids நாளை மாபெரும் விண்கல் ஒன்று, பூமியைக் கடந்து செல்கிறது.  சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட இந்த ராட்சத விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35 என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். 28 லட்சம் மைல்களைக் கடந்து பயணிக்கும் இந்த ராட்சத கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் ‘கேட்டலினா ஸ்கை சர்வே’ மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியைக் கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வு என்கின்றனர் ஆய்வாளர்கள். மணிக்கு 37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகரும் இந்த விண்கல் பூமியில் மோதினால் ஒரு நாட்டையே அழித்து விடும். இதனால் பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என்பதால், இது குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பக்கிங்காம்ஷைர் பல்கலை வானியல் பேராசிரியர் பில் நேப்பியர் இது குறித்துக் கூறியபோது, ‘2014 ஒய்.பி.35’ போன்ற விண்கற்கள் உலக அளவில் பூமியில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. விண்கற்கள் பூமியில் மோதுவது அரிய நிகழ்வு. இருப்பினும், அவை மோதுவதால் ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது என்றார்.