தமிழகத்தில் இன்று மேலும் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு, கரூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர் உட்பட மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ், உள்துறை இணை செயலாளராகவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் நகராட்சி நிர்வாக இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கார்த்திகேயனும், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் இணை செயலாளராக திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- பத்திர பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் ஷங்கர், தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- திண்டுக்கல் ஆட்சியராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம்.
- செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக நியமனம்.
- நாமக்கல் ஆட்சியராக இருந்த மேக்ராஜ், நகராட்சி நிர்வாக இணை இயக்குனராக நியமனம்.
- திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமனம்.
- திருவாரூர் ஆட்சியராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்.
- கரூர் ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.
- மீன்வளத்துறை ஆணையராக கருணாகரன் நியமனம்.
- நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தி நியமனம்.
- வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகம் நியமனம்.
- போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ரா நியமனம்
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி நியமனம்.
- பத்திரப் பதிவுத்துறை ஐஜியாக இருந்த ஷங்கர், தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்.
- விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம் நியமனம்.
- இவர்கள் உள்ப 39 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.