spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பிரியா விடை கொடுத்த இராணுவ வீரர்கள்! வைரல்!

ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பிரியா விடை கொடுத்த இராணுவ வீரர்கள்! வைரல்!

- Advertisement -

இந்திய ராணுவ அதிகாரி ஜீத் தில்லானுக்கு சக ஊழியர்களின் பிரியாவிடை, மனதைக் கவரும் வகையில் வைரலாகி வருகிறது

பணி ஓய்வு பெறும் லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் சிங் ஜீத் தில்லானுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் இதயம் கனிந்த பிரியாவிடை அளித்தனர்

வைரலாகும் இந்த மிலிட்ரி வீடியோவில், லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் சிங் ஜீத் தில்லான் ராணுவ பாரம்பரியத்துடன் பிரியாவிடை கொடுத்து அனுப்புவது பதிவாகியுள்ளது.

பிடித்தமான எந்த செயலுக்கும் இறுதி என்ற ஒன்று உண்டு என்பதுபோல, எவ்வளவுதான் பிடித்தமாக வேலை செய்தாலும், குறிப்பிட்ட வயதில் பணி ஓய்வு பெற வேண்டிய மரபு ராணுவத்தில் கட்டாயமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு நபரின் வாழ்க்கையில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது ஒரு முக்கியமான மைல்கல் என்பதால் அது கொண்டாடப்பட வேண்டும்.

கட்டுப்பாட்டுடன் கொண்டாடப்படும் இந்த பணி ஓய்வு பிரியாவிடை வீடியோவில், இந்திய ராணுவ அதிகாரிகள் தங்கள் சக ஊழியருக்கு ராணுவ மரப்புபடி அற்புதமான பிரியாவிடை வழங்குவதைக் காணலாம்.

சக ஊழியர்கள் அவரை நாற்காலியில் அமர வைத்து, ‘ஜாலி குட் ஃபெலோ’ என்று பாடினார்கள். லெப்டினன்ட் ஜெனரல் தில்லானும் உடன் சென்று, கைதட்டி, எல்லோருடனும் சேர்ந்து பாடலைப் பாடுகிறார்.

பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரலாகவும், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் (உளவுத்துறை) துணைத் தலைவராகவும் பணியாற்றிய ஜெனரல் தில்லானின், ராணுவப் பணியின் கடைசி நாளன்று இந்த பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகும் வீடியோவில் பலரும் கருத்திட்டுள்ளனர்.

நாட்டுக்கு சேவையாற்றிய அவருக்கு மக்கள் நன்றி தெரிவித்து நன்றி தெரிவித்தனர். “நன்றி ஐயா. உங்களைப் போன்றவர்களால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். பணி ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். உங்கள் இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.” என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான், ‘டைனி தில்லான்’ என்று பிரபலமாக அறியப்பட்டவர், 1983 டிசம்பரில் ராணுவத்தில் சேர்ந்த அவர், காஷ்மீரை தளமாகக் கொண்ட XV கார்ப்ஸின் (Kashmir-based XV Corps) தலைவராக இருந்தபோது, ​​ஆபரேஷன் மா என்ற திட்டத்தைத் தொடங்கியதற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.

குறிப்பாக தீவிரவாதத்தில் இணைந்த இளைஞர்களின் குடும்பங்களை அணுகி, தங்கள் குழந்தைகளை தேசிய நீரோட்டத்திற்கு திரும்பக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார் என்பதால் பலராலும் பாரட்டப்பட்டவர் லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe