ஒரே ஒரு உடும்பு தன்னை காப்பாற்றிக் கொள்ள நொடிக்கு நொடி ஆபத்துகளில் இருந்து தப்பித்து செல்கிறது. அந்த உடும்புக்கு ஒவ்வொரு நொடியும் மரணத்தை வெல்லும் நிகழ்வாக தான் இருக்கிறது. வீடியோ பார்க்கும்போது உங்களுக்கே தெரியவரும்.
டிவிட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோவில் பாம்புக்கூட்டம் உலாவும் ஓர் இடத்தில் ஒரே ஒரு உடும்பு மட்டும் ஓடி வருகிறது. அப்போது, எதிர்வரும் பாம்புகள் அந்த உடும்பை வேட்டையாட முயற்சிக்கின்றன.
ஆனால் ஒரு பாம்பிடம் இருந்து தப்பிக்கும் உடும்பு மற்றொரு பாம்பிடம் மாட்டிக் கொள்கிறது. இதுதான் சரியான நேரம் என காத்திருந்த பாம்புகள், கொத்தாக வந்து உடும்பை இறுக்குகின்றன. ஆனால், இங்கு தான் உடும்பின் சாமார்த்தியத்தை பார்க்க முடியும்.
அத்தனை பாம்புகளின் பிடியில் இருந்தும் உடும்பு சாமார்த்தியமாக தப்பித்துச் செல்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல .. சுமார் பத்து பாம்புகளுக்கும் மேல் உடும்பை சுற்றி வேட்டையாட முயற்சித்தும், அவைகளுக்கெல்லாம் கல்தா கொடுத்து தப்பித்த உடும்பு உண்மையிலேயே ஹீரோவாக ஜொலிக்கிறது. இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் 8 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், உடும்பின் தன்னம்பிக்கை, விடா முயற்சி மெய்சிலிர்க்க வைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த உலகம் உன்னை எத்தனை முறை தோத்துட்ட, தோத்துட்ட என சொன்னாலும், நீயா ஒப்புக்கொள்கிற வரை நீ தோக்கமாட்ட என அஜித் பேசும் டையலாக், இந்த உடும்புக்கு அப்படியே பொருந்தும். பாம்புகள் சுற்றிவளைத்து கொல்ல வரும்போது, தைரியமாக தப்பித்த உடும்பு ரியல் ஹீரோ தான் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
What is life… Never give up!!pic.twitter.com/BzV3cVzk2h
— Figen (@TheFigen) April 12, 2022