ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளைகள் ஆணோ, பெண்ணோ அவர்கள் நாயகர்கள் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் தனது தாய் இராஜகுமாரி தான்.
அந்த பந்தம் என்பது யாராலும் பயிற்றுவித்து வருவதில்லை. இரத்தத்தால் ஊற்றெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சாலையில் தாயுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் மகன், பின்னால் இருக்கும் காரை போக்குவரத்து சிக்னலில் கையசைத்து நிற்குமாறும், மெதுவாக வருமாறும் செய்யும் சைகை காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.