திருமண கொண்டாட்டத்தின் போது நிஜ ராஜ நாகத்தை வைத்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடிய பயங்கரம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா பகுதியில் திருமண விழாவில் நடு தெருவில் பாராதி நடனம் ஆடினர். அப்போது வாடகைக்கு கொண்டு வரப்பட்ட நிஜமான பாம்பை கூடையில் வைத்து நடனமாடினர்.
அதனை கையில் ஏந்தியபடி பாம்பாட்டி பாடலுக்கு ஆட்டம் ஆட அவரை தொடர்ந்து அங்கு சூழ்ந்தவர்களும் நடனமாடி கொண்டாடினர். இதனையடுத்து அஞ்சிய அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர் பாம்பை மீட்டனர். அதோடு, பொது இடத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பை வைத்து கொண்டாடியதால் ஐந்து பேரை கைது செய்தனர்.
பாம்பின் விஷத்தை முறித்து இவ்வாறு ஆட்டம் ஆடியதும், அதிக ஒலி கொண்ட பாடலை ஒலிபரப்பியதால் அந்த பாம்பு அதிர்ந்து போயிருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Watch | 'Naagin dance' with cobra lands five in police custody in #Odisha ⤵️#ViralVideo #Viral pic.twitter.com/lr7JoMS3QF
— Editorji (@editorji) April 29, 2022