மகாராஷ்டிராவில் வயல்வெளியில் பயிர்களை கொண்டு கிராம மக்கள் சேர்ந்து உருவாக்கிய வீரசிவாஜியின் உருவம் கூகுள் மேப்ஸில் தெரிவது பலரையும் கவர்ந்துள்ளது!!
மகாரஷ்டிர மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் நிலங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சத்திரபதி சிவாஜியின் உருவத்தை கிராம மக்கள் உருவாக்கி உள்ளனர். இதனை கூகுள் மேப்ஸின் சேட்டிலைட் வியூவ் மூலம் முழுமையாக காண முடிகிறது. சத்திரபதி சிவாஜியின் உருவத்தை தத்ரூபாக பயிரில் உருவாக்கி உள்ளது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.