சிறுவயதில் பள்ளிப் பாடங்களில், இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும், இந்தியாவின் தேசிய பறவை மயில் என்றும், இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்றும், படித்திருப்போம்.
ஆனால் இப்போது தேசிய மலர் பற்றி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
தேசிய விலங்காக புலியையும், தேசிய பறவையாக மயிலையும் அங்கீகரித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கடந்த 2011ல் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தேசிய மலர் என எதையும் அரசு அங்கீகரிக்கவில்லை என்றார்.
இதுவரை தேசிய மலர் தாமரை என பொதுவாக நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு விளக்கத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது வியப்பினை அளித்துள்ளது.