சென்னை சங்கீத வித்வத் சபை – மியூசிக் அகாடமியின் சார்பில் இந்த வருட விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
மியூசிக் அகாதமியின் மிக உயரிய விருதான சங்கீத கலாநிதி விருது, டாக்டர் எஸ். சௌம்யாவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
சங்கீத கலா ஆசார்யா விருது, சீதா நாராயணனுக்கும், எம்.எஸ். ஷீலா வுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் டிடிகே விருது, வியாசர்பாடி கோதண்டராமனுக்கும் ராஜ்குமார் பாரதிக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.
மியூசிக்காலஜிஸ்ட் எனப்படும் இசைவாணர் விருது டாக்டர் ஆரத்தி என்.ராவுக்கும் சிறந்த நாட்டியக் கலைஞருக்கான விருது ந்ருத்ய கலாநிதி விருது பிரியதர்ஷிணி கோவிந்த்துக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.
விருதுகள் பெறும் இசை, நடனக் கலைஞர்களுக்கு நம் தமிழ் தினசரி- தளத்தின் நல்வாழ்த்துகள்!