நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் பாரதிய ஜனதா கட்சி தெளிவாக உள்ளது என்று கூறினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!
கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஓட்டுநர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நாகர்கோயிலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தேர்தலில் கூட்டணி இல்லாமல் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்கும் என்றால், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும் என்று கூறினார்.