நாயினி நரசிம்மா ரெட்டியின் மனைவியும் காலமானார். அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் நாயினி நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தில் மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. அவர் மனைவி அகல்யா (68) உடல்நலம் குன்றியதால் காலமானார்.
நாயினி நரசிம்மா ரெட்டியோடு கூட அவர் மனைவிக்கும் கொரோனா தாக்கியது. ஆனால் அதன்பின் அவருக்கு நெகட்டிவ் வந்தாலும் நுரையீரலில் இன்பெக்சன் பரவியதால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி திங்களன்று மரணமடைந்தார்.
நாயினி காலமானபோது அவரை கடைசியாகப் பார்ப்பதற்காக, அகல்யாவை குடும்பத்தினர் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.
ஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.